ஜெ தீபா, திருநாவுக்கரசு, கடம்பூர் ராஜூ….

மந்திரி ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி மோசடி: ஜெ.தீபா மீது முட்டை வியாபாரி புகார்

தீபா தன்னை மந்திரி ஆக்குவார் என ஒருகோடி தூக்கி கொடுத்த இந்த நபர் எம்மாதிரியானவர்?

இந்த அப்பாவி எப்படி 1 கோடி சம்பாதித்திருக்க முடியும்?

தீபாவினை நம்பியதற்காக அந்த 1 கோடியினை நீதிமன்றத்தில் அபராதமாக கட்டிவிட்டு மீதி இருக்கும் முட்டைகளை பிடுங்கிவிட்டு விரட்டபட வேண்டியவர் இவர், அப்பொழுதுதான் கொஞ்சமேனும் அறிவு வரும்.

ஆனாலும் முட்டை வியாபாரியிடமே 1 கோடி ஆட்டையினை போட்ட குட்டியம்மா, கோழி வியாபாரி, ஆடு வியாபாரியிடம் எவ்வளவு வசூல் செய்திருக்கும்?


ரஜினி, கமலை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்பதை இனிதான் பார்க்க வேண்டும் : திருநாவுக்கரசர் பேட்டி

அது இருக்கட்டும், உங்களை காங்கிரஸ்காரனே ஏற்றுகொள்ளவில்லையே அதுபற்றி என்ன முடிவு?


சுப்பிரமணியசுவாமி ஒரு காமெடியர்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

என்னது அவரும் காமெடியனா?

வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரன் மதிக்கிறதுதான் மரியாதை.