ஞானி கண்ணதாசன் அழுத்தி சொன்ன வரிகள்…
“உன்னை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது”
ஞானி கண்ணதாசன் அழுத்தி சொன்ன வரிகள்…
தரம் தாழ்ந்தோரோடு உறவாயின் அவர்கள் நம்மை தன்போல் நினைத்துகொள்வர் போலும்
தராதரம் பார்த்து பழகாவிட்டால் பெருத்த வேதனையே மிஞ்சுகின்றது என்பார் கண்ணதாசன்.
அனுபவித்து எழுதிய கவிஞனின் வரிகளில் அத்தணை உண்மை இருக்கின்றது
“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என வள்ளலார் ஏன் வேண்டி நின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.
தராதரம் பார்க்காமல் தங்கமென நினைத்து தரமில்லா தகரங்களுடன் பழகிய பின்புதான் உண்மை புரிகின்றது.
“உங்களை புரிந்துகொள்ளோதோருக்கு எதிராக உங்கள் காலணி தூசிகளை தட்டிவிட்டி கிளம்புங்கள்” என்றார் இயேசுநாதர்.
அதன்பின் என்ன?
சட்டி சுட்டது கை விட்டது என கடாசிவிட வேண்டியதுதான்.