டாக்டர் செல்லகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, glasses and close-up

தமிழக கட்சிகளிலே பரிதாபத்திற்குரிய கட்சி தமிழக காங்கிரஸ், பாஜகவினை விடுங்கள் அது ஒருகாலமும் இங்கு ஆளவும் இல்லை, ஆளவும் முடியாது

ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல, அது பல்லாண்டுகள் ஆண்டது, திமுக எழுச்சிக்கு பின்பும் அது பல இடங்களை பிடித்துகொண்டுதான் இருந்தது

ராமசந்திரனை தன் கட்சியில் சேர்க்க காமராஜர் விரும்பவில்லை, அது நடந்திருந்தால் 1977லே காங்கிரஸ் ஆட்சியினை பிடித்திருக்கும்

1984 இந்திரா கொலையின் அனுதாபத்தை காங்கிரஸ் பெறவில்லை, ராமசந்திரனே பெற்றார்

1991ல் ராஜிவ் கொலையும் அதிமுகவற்கே சாதகம், ஜெயா அப்படி முதல்வரானார்

அதன் பின்ன்னும் காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தது, தாமாகாவின் எழுச்சி அதனை சொன்னது, ஆனால் அந்த மூப்பனாரை சரிவர பயன்படுத்தாமல் விட்டது காங்கிரஸ்

ஆக தமிழக காங்கிரசுக்கு எதிரி யாரென்றால் அவர்களேதான், முதல் காரணம் மொத்த இந்திய அரசியல் கட்சிகளை விட தமிழக காங்கிரசில் கோஷ்டி அதிகம்

இதனால் என்னாயிற்று என்றால் கட்சியில் ஒற்றுமை இல்லை, வாக்கு வங்கி சறுக்கி இன்று ஒற்றை எண்ணிக்கைக்கு வந்தாயிற்று

இதுகாலம் தமிழகத்தில இருபெரும் ஆளுமைகள் இருந்தன, இன்று அவை இல்லை. இந்நிலையில் யாரெல்லாமோ கட்சி வளர்க்க துடிக்கும்பொழுது காங்கிரஸ் அமைதியாக இருப்பது நல்லதல்ல‌

முதலில் நல்ல தலைவர் வேண்டும், தலைவர்களுக்கு குறைவில்லா கட்சி அது, எல்லோரையும் வைத்தாயிற்று ஒருமாற்றமும் இல்லை

ஆக புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம், அவ்வகையில் அந்த நபர் கட்சி தொண்டர்களால் கைகாட்டபடுகின்றார்

அவர் டாக்டர் செல்லகுமார்

மிக இளம்வயதிலே கட்சிக்கு வந்தவர், கடந்த 30 ஆண்டுகளில் அக்கட்சிக்கு உழைத்தவர்களில் அவருக்கு மகா முக்கிய பங்கு உண்டு

அதனால் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஆனார்

கட்சிக்குள் அவரை தலைவர்களுக்கு பிடிக்கவில்லையே தவிர, தொண்டர்களுக்கு அவர் மிக பிடித்தமான தலைவராக இருக்கின்றார்

காங்கிரஸ் தலமை அவரை ஒருமுறை அவரிடம் சத்யமூர்த்தி பவனை கொடுத்து பார்க்கலாம், ஒன்றும் குறைந்துவிடாது அல்லது குறைவதற்கு ஒன்றுமில்லை

ஆக அந்த செல்லகுமாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துபார்க்கலாம், எங்கிருந்தோ சுற்றி வந்த திருநாவுக்கரசுக்கு கொடுப்பதை விட , இங்கே 30 ஆண்டுகாலம் உழைத்த ஒருவருக்கு கொடுப்பது நிச்சயம் தவறாகாது

குமரிமாவட்டத்தை சேர்ந்த அவருக்கு உச்ச பொறுப்பு கிடைக்கும் பட்சத்தில் கன்னியாகுமரி மாவட்டம் காமராஜர் காலத்தில் பெற்ற பொற்காலத்தை பெறும்

தமிழக காங்கிரஸின் நம்பிக்கையாக திகழும் அந்த செல்லகுமாருக்கு இன்று பிறந்த நாள், அவருக்கு வாழ்த்துக்கள்

தமிழக காங்கிரஸ் தலை நிமிரவேண்டுமானால் அவரை போன்றவர்கள் முன்னிறுத்தபட வேண்டும், தலைவி குஷ்பு மிக பெரும் அடையாளமாக இருக்கும் நிலையில் அதனை வழிநடத்த செல்லகுமார் போன்றோர்கள் தலைவராகட்டும்

குஷ்புவிற்கு அதற்கு இணையான பொறுப்பு கொடுக்கட்டும்

அதன்பின் நிச்சயம் தமிழக காங்கிரஸ் புத்துயிர் பெறும், ஒருமுறை முயற்சித்துபார்க்கலாம், பெரும் மரங்கள் சரிந்துவிட்ட நிலையில் அடக்கி வைக்கபட்ட தமிழக காங்கிரஸ் மறுபடியும் வளரும்.

இன்னும் தமிழக காங்கிரஸுக்கு வோட்டு வங்கி இருக்கின்றது, தகுந்த தலைவர்கள் வரும்பொழுது நிச்சயம் அது வெளிதெரியும். அது ஒன்றும் அழிந்துவிடவில்லை

டாக்டர் செல்லகுமாருக்கு மறுபடியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவரின் சேவை தொடரட்டும்.