டான் அசோக்கு இளம் கலைஞருக்கு போட்டியா?

கலைஞருக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லை, மஞ்சள் காமாலை என பரபரப்பு : செய்தி

இந்த செய்தியில் எல்லோரும் நிதானம் காப்பது நல்லது

கலைஞரின் உடல்நிலை பற்றி செய்திவரும்பொழுதெல்லாம் அவரின் அந்த பதில்தான் நினைவுக்கு வரும்

கலைஞரிடம் கேட்டார்கள், உங்கள் கவிதை வரிகளில் உங்களுக்கு பிடித்த வரி எது

அவர் சொன்னார்

Image may contain: 3 people, people sitting“மானம் அவன் கேட்ட தாலாட்டு, 
மரணம் அவன் ஆடிய விளையாட்டு..”

கலைஞரும் அவரின் கவிதை வரிபடியே மரணத்தோடு ஆடி கொண்டிருக்கின்றார் .


எனக்குத்தான் அழகிரி பிரச்சினைன்னு பார்த்தா அது யார்டா டான் அசோக்கு இளம் கலைஞர்னு உனக்கு போட்டியா?

தப்பாச்சே, காவேரி சிக்கல் முடியட்டும், இளம் கலைஞரை கவனிச்சிக்கலாம்

இப்பொலாம் குத்துசண்டைக்காரன், கள்ள துப்பாக்கிகாரன் எல்லாம் கட்சியில இருக்கான், இளம் கலைஞருக்கு அதெல்லாம் தெரியாது போல..


சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயரை தமிழன் வைக்கிறான். அண்ணாதுரை என்று பெங்காலி பெயர் வைப்பானா : கமல ஹாசன்

மிஸ்டர் கமலஹாசன் தேச போராளிக்கும் தனி திராவிட நாடு கேட்டவருக்கும் வித்தியாசமில்லையா?

இந்தியனாக சுபாஷ் சந்திரபோஸை தமிழர் வரவேற்கின்றார்கள், பிரிவினை பேசியதால் அண்ணா தமிழகம் தாண்டி செல்லவில்லை

இது கூட புரியாமல் உமக்கு என்ன மய்யமோ மண்ணோ?


அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசனே இயேசுகாவியம் எழுதினார்

கண்ணன் பாடல்களுக்கு இசை அமைத்த எம்.எஸ்வி மாதா பாடல்களுக்கும் இசை அமைக்க தவறவில்லை

ஜேசுதாஸ் பாடாத பாடலில்லை

கலைஞர்கள் மதம், இன, எல்லைக்குள் வரமாட்டார்கள், இதில் சர்ச்சை செய்வதுதான் மதவெறி, குறுக்கு புத்தி, சீழ்பிடித்த சிந்தை


எங்கள் வீட்டில் சாம்பார் வாளி தூக்கியவனையெல்லாம் அமைச்சர் ஆக்கினோம் : தினகரன்

சசிகலா தான் ஜெயாவீட்டு சமையல்காரியாய் இருந்ததை அவரே ஒப்புகொண்டவர்

ஆக அவர் சமைத்திருக்கின்றார் இவர்கள் வாளியினை தூக்கி இருக்க்கின்றார்கள்

இதில் தினகரன் என்ன பெருமை கண்டாரோ தெரியவில்லை, மொத்தத்தில் எல்லாம் ஜெயா வீட்டு அடுப்பாங்கரையில் இருந்த கூட்டம்


விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கை வர அனுமதி – பரிசீலிக்க குழு அமைத்து ரணில் விக்கிரமசிங்கே உத்தரவு

அங்கிள் சைமன் கேட்டதா? இலங்கை செல்ல விசா வேண்டாமாம்

எங்கே உங்கள் தும்பி படைகளுடன் சென்று ஈழம் அமைத்துவிடுங்கள் பார்க்கலாம்

மிஸ்டர் விக்கிரமசிங்கே, இப்படி சொன்னால் மட்டும் இங்குள்ள தும்பிகள் அங்கு வரும் பிடித்து அடிக்கலாம் என கனவு காண்கின்றீர்களா

அவை பனங்காட்டு நரிகள், இங்கே கடந்து கத்துமே தவிர கோடி கொடுத்தாலும் இலங்கை பக்கம் வராது