டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது

இந்தியாவினை பிடித்த வெள்ளையருக்கு கல்கத்தாவே தலைநகரமாக இருந்தது, முதல் கோட்டையினை அங்குதான் கட்டினர்

முதல் வெற்றியினை கிளைவ் அங்குதான் பெற்று ஆட்சியில் அமர்ந்தான், கிழக்கு பகுதி வாணிக மையம் உட்பட பல அனுகூலங்கள் இருந்ததால் கல்கத்தாவினை தலைநகரமானது

1911 வரை அது அப்படித்தான் நீடித்தது, பின் பரந்த இந்தியா ஆப்கனை கைபற்றும் முயற்சி என பல காரணங்களுக்காக அது டெல்லிக்கு மாற்றபட்டது

அது இந்நாள்தான், இந்த டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது

இன்றோடு 106 ஆண்டுகள் ஆகின்றன‌

அவன் நினைத்தபடி எல்லாம் இங்கு இணைத்த வெள்ளையனுக்கு இலங்கையினை இந்தியாவோடு இணைக்கும் திட்டம் இல்லாமல் போகுமா?

இருந்தது

1916ல் சிலோனின் தலமையகம் சென்னையில் இயங்கும் என அறிவிப்பெல்லாம் செய்தான் வெள்ளையன். இலங்கை இந்தியாவோடு இணைந்திருக்கும்

ஆனால் இலங்கை பொங்கிற்று, இலங்கை என்றால் சிங்களர் மட்டுமல்ல அவர்களுக்கு துணையாக யாழ்பாணமும் கொதித்தது

இந்திய தமிழரோடு இணையமாட்டோம் என பொங்கி பின் அந்த தலமையகத்தை இலங்கைக்கே திருப்பினார்கள்

அந்த அளவு தமிழகம் அவர்களுக்கு மட்டமாய் இருந்தது,

நம்மோடு இணைய மறுத்து அவர்கள்தான் பிரிந்து சென்றார்கள், நாம் அவ்வளவு கீழானவர்களாக அவர்கள் மனதிற்கு தெரிந்திருக்கின்றோம்

அந்த இணைப்பு மட்டும் நடந்திருந்தால் இவ்வளவு அழிவு ஈழத்தில் நடந்திருக்காது.

அங்கிள் சைமனும் அவரின் தும்பிகளும் கிளம்பியிருக்காது.