டிடிவி தினகரனை இன்று காணவில்லை …..
யாரும் கேட்காமலே, தானாகவே ஸ்டாலினை விடமாட்டேன், ஸ்டாலின் ஒழிக, ஸ்டாலின் கனவு காண்கின்றார் என தூக்கத்திலும் புலம்பிகொண்டிருந்த டிடிவி தினகரனை இன்று காணவில்லை
மனிதர் சோர்ந்துவிட்டார் போலும்
சீமான், வைகோ போன்றோர்ர்கள் கத்தாத கத்தா? வைக்காத கேள்விகளா? சீறாத சீற்றமா?
அவர்களுக்கெல்லாம் என்றாவது திமுக பதில் சொல்லியிருக்கின்றதா?
கதற கதற கத்தியும் சீமானுக்கோ, வைகோவிற்கோ இன்னும் பலருக்கும் திமுக பதில் சொன்னதே இல்லை, கண்டுகொள்ளாமல் விடுவதை விட உலகில் பெரும் தண்டனை இல்லை
பதில் சொல்லாமல் புறக்கணிப்பது பெரும் தண்டனை, ஒரு வகையான அஹிம்சை கொடூரம்.
சீமானை போல, வைகோவினை போல தினகரனும் அழுதிருப்பாரோ என்னமோ?
அப்படி உணர்ந்திருந்தால் அது அவருக்கு நல்லது.
ஜெ., மரணம் குறித்து மாநில அரசு விசாரணை:மத்திய அரசு தகவல்
இது என்ன மத்திய அரசோ தெரியவில்லை
இலங்கையில் போர்குற்றம் நடந்ததை இலங்கையே விசாரிக்கட்டும் என்றால் ஆமாம் என்கின்றது
இப்பொழுது ஜெயா மர்மத்தை ஆளும் அதிமுக அரசே விசாரிக்கட்டும் என்கிறது
விரைவில் பாபர்மசூதி வழக்கினை அத்வானி விசாரிப்பார் , குஜராத் கலவர வழக்கினை மோடியே விசாரிப்பார் என சொன்னாலும் சொல்வார்கள்…