டிரம்பின் அறிவிப்பால் பெரும் போர் பதற்றம்

டிரம்பின் அறிவிப்பு இப்பொழுது பெரும் போர்பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது, எதுவும் நிகந்து தொலைக்கலாம்

அதாவது சிரிய உள்நாட்டுபோரில் 95% சதவீத வெற்றியினை ரஷ்ய சிரிய படைகள் பெற்றாயிற்று, அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் தோல்விக்கு மேல் தோல்வி பெற்று சரிந்துவிட்டார்கள்

இது ரசாயண ஆயுதம் மூலம் கிடைத்தவெற்றி, இது கொடுமை. இதனை விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா சொன்னபொழுது அதெல்லாம் நாங்கள் விசாரிப்போம் எங்களிடமும் நிபுணர் உண்டு என்றது ரஷ்யா

இது அகில உலக மனிதகுல காவலரான அமெரிக்காவிற்கு பொறுக்கவில்லை, இல்லை இல்லை சிரியா மீது அமெரிக்கா 48 மணி நேரத்தில் மாபெரும் தாக்குதல் நடத்தும் என சொல்லிவிட்டார்

மாஸ்கோ, டமாஸ்கஸ், டெஹ்ரான் ஆகியவை பெரும் சிக்கலை சந்திக்கும் என ரஷ்ய, சிரிய ஈரானிய கூட்டணிக்கு பலத்த எச்சரிக்கை செய்திருக்கின்றார்

48 மணிநேரம் என்ன? 48 நிமிடத்தில் வேண்டுமானாலும் வந்துபார் என்கின்றது ரஷ்யா

இதனிடையே போரின் முன்னோட்டமாக சிரிய விமான நிலையங்களை தாக்கிவிட்டது இஸ்ரேல்

“ஏம்பா டிரம்ப், சிரியாவில் மக்கள் செத்தால்தான் கத்துவியா? பாலஸ்தீனில் கடந்தவாரம் மட்டும் 60 பேர் கொல்லபட்டிருக்கின்றார்களே..” என்றால் டிரம்பிற்கு காது கேட்காது.

ஆளாளுக்கு முடிவோடுதான் இருக்கின்றார்கள் , இதில் சீன ஆதரவு வேறு ஈரானுக்கு உண்டு

அமெரிக்க அதிபர் அறிவித்துவிட்டால் சும்மா அல்ல என்பதால் உலகம் திடீர் கொதிநிலைக்கு வந்திருக்கின்றது