டிரம்பிற்கு மனசாட்சி ஏது?

வடகொரியா மாபெரும் கோபத்தில் இருக்கின்றது, மிக நுட்பமான தந்திரத்தில் அது வீழ்த்தபட்டதை எண்ணி உறுமிகொண்டிருக்கின்றது

அதாவது ஏவுகனை சோதனை , அணுகுண்டு என மிக சந்தோஷமாக இருந்த நாடு வடகொரியா, முதலில் அது யுத்தம் தவிர எதற்கும் தயாரில்லை

ஆனால் சி.ஐ.ஏ அதிகாரி சென்றுவந்ததிலிருந்து அதன் போக்கில் மாறுதல் தெரிந்தது. இனி எல்லாம் சமாதானம் என இறங்கி வந்து தென் கொரிய அதிபருடன் எல்லாம் வடகொரிய அதிபர் பேசினார்

ஜூன் 12ல் வடகொரிய அதிபருடன் டிரம்ப் தென்கொரியாவில் பேச ஏற்பாடெல்லாம் ஆயிற்று

நாம் பேசவேண்டுமென்றால் உங்கள் அணு ஆயுத மையம் தகர்க்கபடுவதை உலகம் காணவேண்டும் என சொன்னது அமெரிக்கா, அதற்கென்ன இதோ பாருங்கள் என சர்வதேச நிபுணர் முன்னிலையில் அதை தகர்த்து வீடியோவினையும் வெளியிட்டது

அதுவரை வடகொரிய ராக்கெட், அணுகுண்டு வீடியோ எனபார்த்து கடுப்பான அமெரிக்கா, வடகொரிய அணுவுலை தகர்க்கபட்டதை பார்த்து நம்பியார் சிரிப்பு சிரித்தது

எல்லாம் இடித்தாகிவிட்டதா? என உறுதிபடுத்திய டிரம்ப், இப்பொழுது அண்ணாமலை ரஜினி வீட்டை இடித்துபோட்ட ராதாரவி போல பேசிகொண்டிருக்கின்றார்

உன்னிடம் என்ன பேச்சு, அணுவுலையினை இடித்துவிட்டாய் அல்லவா? அப்படியே போ. பொருளாதார தடை எல்லாம் விலக்க முடியாது, விலக்கினால் நீ அணுகுண்டு செய்வாய் என சொல்லி வில்லன் சிரிப்பு சிரிக்கின்றது

அடடா என்ன ஒரு ராஜதந்திரம் என அமெரிக்க அடிப்பொடிகள் ஜால்ரா அடிக்க டிரம்பிற்கு ஒரே சிரிப்பு

ஆனால் விஷயம் தெரிந்த உலக நாடுகள், “ச்சீ நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்?” என காரிதுப்பிகொண்டிருக்கின்றன‌

பெரும் அசிங்கபட்டுகொண்டிருக்கின்றார் டிரம்ப்

வடகொரியா ஆத்திரத்தின் உச்சியில் இருக்கின்றது, எந்நேரமும் கடன் வாங்கியாவது அணுகுண்டு வீசலாம் , அல்லது அண்ணாமலை ரஜினி போல “இந்த நாள் உன் காலண்டரில் குறிச்சு வச்சுக்கோ” என சவால் விட்டுகொண்டிருக்கலாம்

ஆனாலும் டிரம்பின் செயல் மகா மோசம் , இந்த மனிதருக்கு பைபிள் படிக்க்க என்ன யோக்கியதை இருக்கின்றது என அமெரிக்காவிலே சிலர் கேட்டுகொண்டிருக்கின்றனர்

டிரம்பிற்கு மனசாட்சி ஏது?

ஆனால் நிச்சயம் இது அமெரிக்காவிற்கு மாபெரும் அழிவினை ஒரு நாள் கொண்டுவரும், நிச்சயம் வரும்