டிரம்பும் இஸ்ரேலும் அடாவடி பார்ட்டிகள்…
கிட்டதட்ட 2000 ஆண்டுகள் நடத்திய போராட்டத்தில் யூதர்கள் வென்றுகொண்டிருகின்றார்கள், அவர்கள் இலக்கு நிறைவேற போகின்றது
அதாகபட்டது ஜெருசலேம் யூதர்களின் பூமி என்பதே அவர்கள் கொள்கை, அவர்கள் மத நூலெங்கும் அது நிரம்ப கிடக்கின்றது, அவர்கள் வாழ்வு,கனவு, ஏக்கம், புனிதம் எல்லாமே அந்த ஊரும் அதில் இருந்த ஆலயமுமே
யூதன் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அதற்காகவே, அவன் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசமும் அந்த ஜெருசலேமிறாகவே
தாவீது அரசர் காலத்தில் இருந்து எங்கெங்கோ சுற்றினாலும் இறுதியி ஜெருசலேம் வந்துவிடும் யூதர்களுக்கு சிக்கல் ரோமர் காலத்தில் தொடங்கிற்று
அப்பொழுதுதான் கோயில் இடிக்கபட்டு உலகெல்லாம் சிதறடிக்கபட்டனர்
இயேசுவு முகமது நபியும் வந்து சென்ற பின்னர் ஜெருசலேம் உரிமை கிறிஸ்தவ, இஸ்லாம் மோதலாயிற்று. கிறிஸ்தவர்களுக்கு அது இயேசு வாழ்ந்த பூமி இஸ்லாமியருக்கு அது மூன்றாம் முக்கிய மசூதி
தங்கள் பூமிக்காக யாரோ இருவர் மோதிகொள்வதாக அழுத யூத இனம் அமைதிகாத்தது.
கிட்டதட்ட 500 ஆண்டுகால யுத்தம் அதற்காக நடந்து இறுதியில் இஸ்லாமிய பூமியானது ஜெருசலேம்
ஆட்டோமான் துருக்கியர் உலகபோரில் தோற்க, பிரிட்டனிடம் வீழ்ந்தது ஜெருசலேம் , இஸ்ரேல் அப்பொழுதுதான் உருவானது
இஸ்ரேல் உருவானாலும் ஜெருசலேம் பாலஸ்தீன் வசமே இருந்தது, காரணம் அது இஸ்ரேலுக்கு என்றால் அரபு உலகம் சும்மா இருக்காது
ஜெருசலேமிற்காகவே இஸ்ரேலை அடைந்த யூதர்கள் விடாமல் துரத்தினர் ,, சில யுத்தங்களை நடத்தி இஸ்ரேல் அழிச்சாட்ட்சியம் செய்தது
இறுதியில் நவீன ஜெருசலேம் இஸ்ரேலுக்கு என்றும், பாரம்பரிய கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்திற்கு என்றும் கூறு போட்டார்கள்.
கடந்த 60 ஆண்டுகளாக அப்படித்தான் இருந்து வருகின்றது நிலை, இஸ்ரேலியரோ முழு ஜெருசலேம் கிடைக்கமாலும் , தேவாலயம் அமையும் இடத்தில் மசூதி இருப்பதாலும், பழைய சுவரில் முட்டி முட்டி அழுவார்கள்
இப்பொழுது காட்சிகள் மாறுகின்றன, மாற்றுபவர் மிஸ்டர் டிரம்ப்
அமெரிக்க தேர்தலில் எல்லா கட்சிகளும் சொல்வதுதான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலின்அ மெரிக்க தூதரம் ஜெருசலேமில் அமையும், ஆனால் வந்ததும் அமைதி ஆவார்கள். அரேபிய மிரட்டல் அப்படி
இப்பொழுது டிரம்ப் ஆணிதரமாக நிற்கின்றார், மனிதர் ஒரு மாதிரியானவர் அல்லவா?
அமெரிக்க தூதரகம் ஜெருசலமேல் அமைந்தால் என்னாகும்?
அமெரிக்க தூதரகம் அமைந்துவிட்டது, இனி இதுதான் தலைநகர் என டெல் அவிவில் இருந்து இஸ்ரேலிய தலைநகர் ஜெருசலேமிற்கு மாற்றபடும்
அதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேல் தொடங்கிவிட்டது
டிரம்போடு சேர்ந்து இனி ஜெருசலேமினை இஸ்ரேல் விழுங்கலாம், இஸ்லாமியரின் கடும் எதிர்ப்பினை அது பொருட்படுத்தவில்லை, இன்றைய தேதியில் ஈரானை தவிர இஸ்ரேலை எதிர்க்க வளைகுடாவில் ஒரு நாடுமில்லை
ஈரானும் ஐஎஸ் இயக்கத்துடன் சிரியாவிலும் ஈராக்கிலும் சிக்கி கிடக்கின்றது, ஐ.எஸ் இயக்கம் இஸ்ரேலை ஒருபோதும் சீண்டாது
2000 வருடத்திற்கு முன்பு இருந்த தங்கள் தாயகம் என ஜெருசலமினை அடைகின்றார்கள், அவர்கள் மதநூலிலும் பைபிளிலும் நிரம்ப இருக்கின்றதாம்
குரானில் அதுபற்றி ஒரு வார்த்தையும் இல்லையாம், அதனால் அது இஸ்லாமிய அடையாளமில்லை என்பது அவர்கள் வாதம்
ஜெயித்து விடும் தொலைவிற்கு வந்துவிட்டார்கள்,
ஆனாலும் அரபு உலகமும், வளைகுடாவும், இஸ்லாமிய உலகமும் சும்மா இருக்காது அது வரிந்து கட்டி கிளம்பும், விடமாட்டார்கள், விடவே மாட்டார்கள்.
இப்பக்கம் டிரம்பும் இஸ்ரேலும் அடாவடி பார்ட்டிகள் என்பது உலகிற்கே தெரியும்
ஐ.எஸ் இயக்கம் இஸ்ரேலிய தயாரிப்பு அதனால் அது இஸ்ரேலை தாக்காது என ஒரு சந்தேகம் உண்டு
இப்பொழுது டிரம்பும் இஸ்ரேலிய தயாரிப்பு என பெயரெடுத்துவிட்டார்
இன்னும் யார் யாரையெல்லாம் தயாரித்திருக்கின்றார்களோ அவர்கள்?
ராஜதந்திரம் என்பதற்கும், பெரும் நுடபமான வஞ்சனைகளுக்கும் இந்த இஸ்ரேலியரே என்றும்
நம்பர் 1
2000 ஆண்டுகளுக்கு இருந்த எங்கள் பூர்வீக பூமி என உலகையே வென்று ஜெருசலமேமினை கைபற்றுகின்றார்கள் யூதர்கள்.
அவர்கள் அப்படித்தான்
இன்றைய உலகில் பெரும் பழமை ஒருபுறமும், அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறமும் கலந்து ஒரு நகரம் உண்டென்றால் அது ஜெருசலேம் மட்டுமே
ஆனால் அதனால் இறந்திருக்கும் உயிர்களும் கோடான கோடி, இன்னும் சாக இருக்கும் மனித இனமும் பலகோடி
இயேசுவே அதனை பார்த்து கண்ணீர் விட்டதாக பைபிள் சொல்கின்றது
இப்படி கோடான கோடி உயிர்களை அது பழிவாங்கும், பெரும் அழிவான பெரும் போர்களுக்கு அது வழிவகுக்கும் என அவருக்கு அன்றே தெரிந்திருக்கின்றது
அந்த துயரம் இன்னும் தொடர்கின்றது
பெரும் போருக்கும் குழப்பத்திற்கும் மேற்கு ஆசியா தயாராகின்றது
இதுவரை ஜெருசலேம் பெயரால் கோடி கணக்கான மக்கள் கொல்லபடுவதை பார்த்துகொண்டிருந்த கடவுள், இனியும் அப்படியே பார்த்துகொண்டே இருப்பார்
சிவபெருமான் வந்து பாடி, ஹேமநாதபாகவதரை விரட்டியதற்காக பாண்டியமன்னன் அந்த பாணபுத்திரனுக்கு கொஞ்சம் நிலம் கொடுத்ததாக புராண செய்திகள் உண்டு
அந்த நிலம் எங்கே இருக்கின்றது?
அங்கிள் சைமனைத்தான் கேட்க வேண்டும்