டிரம்ப் என்பவர் மறுபடியும் வடகொரியாவுடன் உரச ஆரம்பித்துவிட்டார்
இந்த டிரம்ப் என்பவர் மறுபடியும் வடகொரியாவுடன் உரச ஆரம்பித்துவிட்டார், கடந்த 12ம் தேதிதான் “நண்பேண்டா.” என வடகொரிய அதிபருடன் சிங்கப்பூரில் செல்பி எல்லாம் எடுத்தவர் இப்பொழுது பல்டி அடித்துவிட்டார்
என்ன சொல்கின்றார்?
“ஏ வடகொரியாவே நீ புது நண்பன். புது நண்பனை முழுக்க நம்பாதே என நான் தினமும் படிக்கும் பைபிளின் பழமொழி ஆகமம் சொல்கின்றது, அதை நான் மீற முடியாது
நாம் நன்றாக பழகுவோம், இன்னும் ஒருவருடம் பழகிவிட்டு அதன் பின் உன் பொருளாதார தடை விலக்கம் பற்றி யோசிப்போம் மற்றபடி நாம் நண்பர்கள், அண்ணன் புஷ் போட்ட பொருளாதார தடையினை இப்பொழுது நீக்க முடியாது” இப்படி சொல்லிவிட்டார்
கடும் தாகத்தில் வாய்பிளந்து நிற்கும் வடகொரியா, அப்புறம் பழகலாம் முதலில் தாகத்திற்கு தண்ணீர்கொடு என கெஞ்சினாலும் டிரம்பிடம் பதில் இல்லை
விஷயம் மறுபடி வில்லங்கமாகின்றது
வடகொரியா இன்னும் மவுனம் சாதிக்கின்றது, “ஏ டிரம்ப் உன் காலண்டர்ல இந்த நாளை குறிச்சி வச்சிக்க..” என அண்ணாமலை ரஜினி போல சவால் விட போகின்றதா இல்லை “ஏ கலெக்டரு ஏமாத்தி போட்டியலே..” என சிட்டிசன் அஜித் போல அழப்போகின்றதா என்பது பற்றி இனிதான் தெரியும்