டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் எஸ்.ஏ சந்திரசேகர்
ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டு போனவர்களில் ரஜினி, கமல் வரிசையில் எஸ்.ஏ சந்திரசேகரும் வந்துவிட்டார்.
சினிமாவில் அரசியலும் புரட்சியும் பேசிவிட்டு தியேட்டருக்கு வெளியே மகனை முதல்வராக்குவது பற்றிய சிந்தனையிலே இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகர், அவர் இப்பொழுது டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம்
அவரே டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிப்பாராம். அரசியல் படமென்பதால் அவருக்கு வினோத ஆசை வந்திருக்கின்றது. அதாவது அரசியலில் பிசியாக இருக்கும் நடிகர்களை நடிக்க அழைத்திருக்கின்றார்
அதில் தலைவி குஷ்புவினை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றார், சங்கம் அதனை வரவேற்ற வேளையில் பெரும் அழிச்சாட்டியம் செய்துவிட்டார்
ஆம், அங்கிள் சைமனையும் ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இது எப்படி சரியாகும்?
பொய்யே சொல்லாதவரும், எந்நிலையிலும் பெண் அரிசந்திரனாக உண்மைக்கு சாட்சியாக வாழ்பவரும் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதிக்கு போராடியவரும், பெரும் தேசாபிமானியான தலைவியும்
நொடிக்கொரு பல்டி அடித்து விட்டு , இல்லா பொய்களை எல்லாம் பிரிவினைவாதி சொல்லும் சைமனும் ஒன்றா?
படம் வரட்டும் , தலைவி சம்பந்தபட்ட காட்சிகள் தனியாக இருந்தால் சிக்கல் இல்லை. மாறாக அங்கிள் சைமனை தலைவி பக்கம் நிறுத்தியிருந்தால் சங்கம் பொறுக்காது
சங்கத்து எச்சரிக்கையினையும், எதிர்ப்பினையும் மீறி அப்படிகாட்சிகள் எடுக்கபட்டால் சங்கம் உடனடி போராட்டத்தில் இறங்கும்
தீ குளித்தல், தியேட்டரில் மாடு அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், புரோஜக்டரை பறித்தல், படபெட்டியினை தூக்கிகொண்டு ஓடுதல் போன்ற ஜனநாயக வழிமுறையில் சங்கம் போராடும்
அன்னபறவையினை கழுதை முன் நிறுத்தவதா? என சீறும் சங்கம் பல வீரியமான போராட்டங்களை முன்னெடுக்கும்
இவ்விஷயத்தில் தலைவியே சொன்னாலும் விட்டுகொடுப்பதாக இல்லை. சங்கம் தடை செய்யபடும் அளவிற்கு சென்றாலும் அதனை எதிர்கொள்ள சங்கத்து கோடான கோடி உறுப்பினர்கள் தயார்
எஸ்.ஏ சந்திரசேகர் சங்கத்தினரை போராட்ட களத்தில் சந்திக்க விரும்பமாட்டார் என்றே கருதி சங்கம் கடும் எச்சரிக்கை மட்டும் இப்பொழுது செய்கின்றது.
இதனை மீறியும் காட்சிகள் வில்லங்கமாக அமைக்கபட்டால், சங்கத்தார் மனம் புண்படும்படி இருந்தால் டிராபிக் ராமசாமி கோர்ட்டில் பல வழக்குகளுக்கு சென்றது போல இப்படகுழுவும் செல்லும் சூழல் வரலாம்.
டிராபிக் ராமசாமி பட்ட பாடுகளை இப்படமும் படலாம்.
தலைவியின் புகழை குறைக்கும் எந்த விஷயத்திலும் சங்கம் சமரசம் செய்துகொள்ளாது.
இது முதல் எச்சரிக்கை