டிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்
டிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்
இப்பொழுது மெக்கெய்ன் முறை
அதாவது ஜாண் மெக்கய்ன் என அமெரிக்க பிரபலம் உண்டு, மனிதர் கென்னடி சாயல், அவர் போலவே கடற்படை வீரர் மற்றும் அரசியல்வாதி
அமெரிக்காவின் பெரும் சர்ச்சையான வியட்நாம் யுத்ததில் பங்கெடுத்தவர், வியட்நாமியர்கள் ஒரு சண்டையில் இவரை பிடித்து உள்ளே போட்டார்கள், கொன்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள்
மனிதர் சாவின் விளிம்புவரை சென்று பின் மீண்டார், 5 ஆண்டு அமெரிக்காவிற்காக வியட்நாம் சிறையில் இருந்தார்
அவர் தாய்நாட்டுக்கு திரும்பியதும் ஆதரவு அதிகரித்தது, செனட்டராக எல்லாம் இருந்தார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், கிளிண்டன் ஒபாமா எல்லோருடனும் கூட மோதினார்
ஆனால் வெற்றிபெறவில்லை, எனினும் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் பெற்றிருந்தார்
இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார், அவருக்கு டிரம்ப் உரிய மரியாதை கொடுக்கவில்லை காரணம் அவருக்கும் டிரம்பிற்கும் ஒத்துவராது.
விஷயம் சர்ச்சையாகி ஆளாளுக்கு டிரம்ப் டையினை பிடித்து இழுத்துவிட்டார்கள்
காரணம் சில மாதங்களுக்கு முன்பு இறந்த போதகர் பில்லி கிரகாம் என்பவருக்கு முழு அரசு மரியாதை கொடுக்கபட்டது, இது குத்தி காட்டபட்டது
கடுப்பான டிரம்ப் “யோவ் அரசு மரியாதை கொடுங்கய்யா” என சொல்ல்விட்டார்
இதை தொடர்ந்து அமெரிக்க கொடிகள் அரைகம்பத்தில் பறக்கின்றன, அரசு மரியாதை ஆரம்பித்தாயிற்று
அமெரிக்காவின் மிகபெரும் தேசபக்தரான மெக்கெய்னுக்கு அரசு மரியாதை கொடுக்க தயங்கிய டிரம்பினை விட, இந்தியாவில் ஒரு காலத்தில் பிரிவினை பேசியவரும் பின் இந்திய ராணுவத்தினை அவமதித்து தேசதுரோக சிக்கலில் சிக்கியவருமான கலைஞர் கருணாநிதிக்கு இந்திய அரசு மரியாதை அளித்த மோடி உயர்வாகவே நிற்கின்றார்