டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

Image may contain: 1 person, smiling, close-up

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

என்ன சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கின்றார் என்றால் , டிவிட்டர் அவரின் நேரத்தை விழுங்குகின்றதாம், அவர் வாசிப்பில் கவனம் செலுத்தபோகின்றாராம், இது தற்காலிகம் என சொல்லியிருக்கின்றார்

அவர் இப்படி சொல்லியிருந்தாலும் கடந்த இரு நாட்களாக சுருதிஹாசனை போட்டு காய்ச்சிகொண்டிருந்தார், சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய காரணத்தை தவறாக ஸ்ருதி சொல்லிகொண்டிருக்க, குஷ்பூவிற்கு கோபம் வந்துவிட்டது, விளாசிவிட்டார்

ஸ்ருதியும் என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றார்

பதிலுக்கு பதில் பேசவேண்டியிருக்கும் என்பதால் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்க வெளியேறியிருக்கலாம் என ரசிக பெருமக்கள் யூகிக்கின்றோம்

அவர் ஏன் விலக வேண்டும் என்பதுதான் கேள்வி?,

கண்மணிகளே இந்த ஸ்ருதியினை கவனியுங்கள் என கண்ணசைவினை காட்டியிருந்தால் கட்டப்பா போல குஷ்பூ ரசிகபடை பாய்ந்திருக்கும், ஸ்ருதி பசிபிக் கடலுக்கு அப்பால் எறியபட்டிருப்பார்

குஷ்பூ பெருந்தன்மையாக அமைதியாவதால் பெரும் கலவரம் தடுக்கபட்டிருக்கின்றது, ஏற்கனவே பெரும் சிக்கலில் இருக்கும் கமலஹாசனுக்கு இன்னும் பிரச்சினையினை கொடுக்க குஷ்பூ விரும்பவில்லை என்பது தெரிகின்றது

மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் அல்லவா? குஷ்பூ அப்படித்தான்.

டிவிட்டரும் அவர் நேரத்தை விழுங்கலாம், வெட்டியாக அதில் சும்மா ஏதாவது சொல்லிகொண்டிருக்க அவர் என்ன மோடியா அல்லது டிரம்பா?

இனி நிறைய வாசிக்க போகின்றாராம் தலைவி, நல்லது அப்படியே அந்தணன் அவர்களின் இணைய பத்திரிகையினையும் வாசிக்கட்டும்.

எப்பொழுதாவது தேர் ஊர்வலம் வந்தால்தான் திருவிழா, குஷ்பூ அப்படி வருடத்திற்கு ஒருமுறை டிவிட்டர் வந்தால் போதாதா?

அவருக்கான ரசிகர் கூட்டம் எங்கு சென்றுவிட போகின்றது? அந்த பெருங்கூட்டம் அவருக்காக‌ காத்துகொண்டே தான் இருக்கும்.

நல்ல வேளையாக தமிழிசையுடன் டிவிட்டர் யுத்தம் நடக்கும் பொழுது குஷ்பூ இந்த முடிவினை எடுக்க முடியவிலை, அப்படி எடுத்திருந்தால் தமிழிசையின் தகிட தகிடவினை யாரால் தாங்கியிருக்க முடியும்?

அப்படி ஒரு வாய்ப்பினை கொடுக்காமல் இப்பொழுது தற்காலிகமாக விலகியிருப்பது நல்லது.

இனி டிவிட்டருக்குத்தான் சோதனையான காலம், பல லட்சம் பேர் குஷ்பூ இல்லாத டிவிட்டரை விட்டு வெளியேறுவார்கள்