டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது.

டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது.

நிலவேம்பு விற்பபனை, பப்பாளி இலை, கொசுமருந்து, கொசுவலை என திடீர் வியாபாரம் பெருகிவிட்டது

சுகாதார துறை வேறு ஆங்காங்கு சோதனை செய்து தேங்கி நிற்கும் நீரை கண்டுவிட்டால் அந்த கட்டட உரிமையாளர்களிடம் கடும் வசூலில் இறங்கியிருக்கின்றது

இதில் எவ்வளவு வெள்ளை வசூல், எவ்வளவு கருப்பு வசூல் என ஒரு காலமும் தெரியாது. அந்த அபராத வசூல் கொட்டுகின்றது, இதுதான் சாக்கு என கறந்துவிடுகின்றார்களாம்

ஆக டெங்குவினால் பலருக்கு பணமழை கொட்டும் நேரமிது.

அரசு ஒருபக்கம் டெங்குவினை ஒழிக்க பாடுபடுவதாக சொன்னாலும், அது விரைவில் ஒழிந்துவிட கூடாது கடவுளே என சொல்லி வசூலிக்கும் கும்பல்களும் வந்துவிட்டன‌

டெங்கு என ஒருபக்கம் பயங்கர மிரட்டல் இருந்தாலும், இன்னொரு பக்கம் “காசுமேலே காசு வந்து கொட்டுகின்ற நேரமிது” என ஆட்டம்போடும் கும்பல்களும் உருவாகிவிட்டன‌

இதனையும் அரசு கட்டுபடுத்துவது நல்லது.