டெனான்மன் ஸ்குயரில் இந்திய டெஸ்டிமோனோ குஷ்பூ…
இதனை எழுதிய யுவ கிருஷ்ணா அவர்களை வாழ்த்துகின்றோம், விரைவில் மன்றத்தின் சார்பில் அவருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கபடும் நிகழ்ச்சி நடைபெறும்
இந்த கட்டுரையில் குஷ்பூ தமிழகத்திற்கு வந்து ஜெயித்த விதத்தை சொல்லியிருந்தார், இவை எல்லாம் நாம் பைபிள், கீதை, உலக வரலாறு போல தேடி தேடி படித்த விஷயங்கள்
ஆனால் அதிர்ச்சியான விஷயம், கோவில் கட்டிய செய்தி பொய்யாக இருக்கலாம் என அவர் முடித்திருந்ததுதான்
அது பொய்யாக விடுவோமா? விடவே மாட்டோம்
இவ்வுலகில் பல வகையான கோயில்கள் உண்டு, எலி முதல் பல விலங்குகளுக்கு உண்டு , மதுரை வீரன் போன்ற வாழந்து முடிந்தவர்களுக்கும் உண்டு
மண்ணுலகம் வந்து சென்ற தேவதைகளுக்கும் உண்டு, இவர்களுக்குத்தான் கோயில் எனும் விதிமுறை என்றுமே இல்லை
சுப்பிரமணிய சிவா பாரத மாதாவிற்கு கட்ட முயன்றார், சிலர் காந்திக்கு கட்டினார்கள், எம்.ஆர் ராதா தன் மனைவிக்கு கட்டினார், சிலர் தாய்க்கு கட்டினார்கள்
அலெக்ஸாண்டர் தன் குதிரைக்கே இன்றைய பாகிஸ்தானில் முன்பு கோயில் கட்டினான் என்பார்கள்
சிலர் ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் எல்லாம் கட்டினார்கள்
அப்படி நமது சங்கமும் விரைவில் கட்டும், அது பற்றிய முடிவு பின்னர் அறிவிக்கபடலாம்
பொய்யாகி போனதை, மெய்யாக்கி காட்ட மன்றத்தின் பொதுகுழு கூட்டம் விரைவில் நடக்கும்
டெனான்மன் ஸ்குயரில் இந்திய டெஸ்டிமோனோ…
(கண் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காக அருகில் சிலர் நிறுத்தபட்டிருக்கிக்கலாம்..)