டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்
தமிழகத்தை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் , பாலும் தேனும் ஓடும் என சொல்லிகொண்டிருந்த எல்லோரும் மகா அமைதி,
இருக்கின்றார்களா? இல்லையா? என்பதே தெரியவில்லை.
இவ்வளவிற்கும் பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில்தான் பச்சை கோவணத்துடன் விவசாயி டெல்லியில் கோஷமிட்டு கொண்டிருக்கின்றான்..
தமிழன் முதல்வராக வேண்டும் என்ற பாரதிராஜா தினகரன் பின்னால் அலைகின்றார், அவரை பொறுத்தவரை தின்கரன் மட்டும்தான் தமிழர் போல..
அங்கிள் சைமன் இந்த தமிழ் முதல்வர் என்ன செய்கின்றார் என கண்டுகொள்ளாமல் அதனை மறந்துவிட்டு, இன்னும் தமிழன் முதல்வர், தமிழன் ஆட்சி என ஆர்.கே நகரில் ஊளையிடுகின்றார்
பச்சை தமிழன் ஆட்சியில் என்ன சாதனை நிகழ்கின்றது?, நீங்கள் ஆசைபட்டபடி நடந்தாலும் ஏன் ஒரு மாற்றமுமில்லை என கேட்டால் பதிலே வரவில்லை, வரவும் வராது.
ஆக தமிழனின் ஆட்சியும் சரியில்லை, இனி என்ன செய்யலாம்?
பிரிட்டிஷ்காரனை வரவழைக்கலாமா?