டெல்லியில் திமுக மகளிரணி போராட்டம் நடத்தும் : கனிமொழி
மார்ச் 20ம் தேதி பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்ககோரி, டெல்லியில் திமுக மகளிரணி போராட்டம் நடத்தும் : கனிமொழி
திமுகவில் 33% பெண்களுக்கு இடம் கேட்டு எப்பொழுது அறிவாலம் முன்னால் போராட்டம் நடத்தபோகின்றீர்கள் மேடம்?
(கட்சியில் இருந்த குஷ்பூவினை விரட்டியாயிற்று, தமிழச்சி தங்கபாண்டியனை எல்லாம் காணவே இல்லை)
கட்சியில் பெண்களுக்கு 33% கொடுத்துவிட்டு, டெல்லியில் சென்று கேட்டால் ஒரு மதிப்பும் மரியாதையும் திமுக மேல் ஏற்படும் அல்லவா?
ஆக முதலில் செயல்தலைவர் முன்னால் சென்று கட்சியில் 33%, தேர்தலில் 33%, பதவியில் 33% என போராடி உறுதிசெய்துவிட்டு , டெல்லி சென்றால் நன்றாக இருக்கும் அம்மணி
முன்பு பாஜகவின் சுஷ்மா இப்படித்தான் சொல்லிகொண்டிருந்தார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 33% இடஒதுக்கீட்டை வழங்குவோம் என்றார், ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் என்பது போல அதுவும் அவர்களுக்கு மறந்துவிட்டது
இப்பொழுது கனிமொழி நினைவுபடுத்த துடிக்கின்றாராம்
முதலில் பெரியார் வழி வந்த கட்சியில் 33% பெண்களுக்கு உரிமை கொடுக்க சொல்லுங்கள் அம்மணி, டெல்லியினை அதன் பின் பார்க்கலாம்
உங்களை தவிர எந்த பெண் தலைவரை திமுக உருவாக்கிவிட்டது அம்மணி?
இதற்கு அதிமுக பரவாயில்லை 2 பெண் முதல்வர்களையே கொடுத்துவிட்டது, விட்டால் மூன்றாவது பெண் முதல்வரையே கொடுத்திருக்கும்
ஆனால் திமுக நிலை என்ன?
முதலில் உங்கள் கட்சிக்குள் 33% இடஒதுக்கீடு என குரல் எழுப்புவீர்களா? பெற்று கொடுப்பீர்களா?
செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
திமுக தொண்டரடிபொடிகளே, வந்து உங்கள் கருத்துக்களை பொழியுங்கள்…
உடன் பிறப்புக்களே
உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% என அறிவித்தவர் ஜெயலலிதா என செய்திகள் சொல்கின்றன, அதனால் திமுக 33% உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கியது என்பதெல்லாம் அடிபட்டு போகின்றன
கடந்த சட்டமன்ற தேர்தலில் 11 பெண் வேட்பாளர்களை மட்டும் திமுக நிறுத்தியிருக்கின்றது, அது 5%க்கும் குறைவானது
ஆக இங்கு 5% கூட கொடுக்காத திமுக, டெல்லியில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது எவ்வகை நியாயம்?
ஸ்டாலினிடம் கேட்காத கனிமொழி, டெல்லி மோடியிடம் மட்டும் போராடுவாரா?
common brothers….