டெல்லி சூனியம் படுத்தும்பாடு
கட்சியில் தினகரனுக்கு கட்டம் கட்டுகின்றார்கள். பன்னீரும், பழனிச்சாமியும் அடித்த அடியில் மனிதர் படாதபாடு படுகின்றார். திவாகரனுடன் போஸ் கொடுத்ததெல்லாம் பிரயோசனமில்லை
அதில் இப்பொழுது மனிதர் வெறுத்து சித்தர்களிடம் ஆசிவாங்க கிளம்பிவிட்டார். திருவண்ணாமலை மூக்குபொடி சித்தரிடம் ஆசிவாங்கினாராம்.
அவர் நல்ல சித்தர் என்றால் மூக்குபொடியினை தினகரன் முகத்திலே அடித்திருக்கலாம். அவர் என்ன சித்தரோ ஆசி வழங்கிவிட்டாராம்
அடுத்து தினகரன் புகையிலை சித்தர், சிகெரெட் சித்தர் என தன் பயணங்களை தொடரலாம்
எப்படி இருந்த தினகரன் இப்படி பிதாமகன் விக்ரம் லெவலுக்கு சென்றுவிட்டார்.
எல்லாம் டெல்லி சூனியம் படுத்தும்பாடு.
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் : செய்தி
ஆனானபட்ட ஜெயா சசிகலாவினை நீக்கியே ஒன்றும் ஆகவில்லை, பின்வாசல் வழியே சமத்தாக புகுந்துகொண்டவர் சசிகலா.
இந்த நாடகம் எல்லாம்எல்லாம் இரட்டை இலை மீட்கும் வரைதான், சின்னம் கிடைத்துவிட்டால் காட்சிகள் நிச்சயம் மாறும்.
அந்த நாடக கம்பெனிக்கு இந்த காட்சிகள் எல்லாம் சகஜம்..
கேரளாவில் யானைக்கு மதம் பிடித்தது, கண்ணில் பட்டதை எல்லாம் தூக்கி எறிந்தது : செய்தி
இந்த மதம், அன்று “நல்ல நேரம்” படப்பிடிப்பில் இருந்த யானைகளில் ஒன்றிற்கு பிடித்திருக்க கூடாதா? தூக்கி அடித்திருக்க கூடாதா?
அப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் தமிழ்நாடு?
