டோக்லஹாம் எல்லையில் பெரும் தாக்குதலுக்கு தயாராக நிற்கின்றது சீனா

Image may contain: one or more people and outdoor

இங்கே ஆளாளுக்கு மோடி, பட்டேல் , ரேனுகா சவுத்திரி என குதித்துகொண்டிருந்தாலும் நாட்டிற்கு மிக ஆபத்தான விஷயம் ஒன்று எல்லையில் உருவாகியிருக்கின்றது

அதாகபட்டது டோக்லஹாம் எல்லையில் பெரும் தாக்குதலுக்கு தயாராக நிற்கின்றது சீனா

தான் எந்நாளும் நயவஞ்சக நாடு, மாறவே மாட்டோம் என்பதை மறுமுறையும் நிரூபித்திருக்கின்றது, 5 மாதங்களுக்கு முன்பு போரின் எல்லை வரை இரு தேசமும் சென்றது , பின் அமைதி திரும்பியதாக அறிவிக்கபட்டது

ஆனால் என்ன நடந்திருக்கின்றது?

5 மாதம் முன்னால் சாலை போட வந்த சீனா இந்திய எதிர்ப்பினை அடுத்து இனி யுத்தமே முடிவு என்ற ரீதியில் பின்வாங்கி, கடந்த 5 மாதமாக நரித்தனமாக யுத்த தயாரிப்பினை செய்திருக்கின்றது

நாலந்துலா கணவாயினையும் திறந்துவிட்டு சமாதானம் ஆவது போல போக்கு காட்டிவிட்டு எல்லையில் பதுங்கு குழி அமைத்தல், கண்காணிப்பபு கோபுரங்களை கட்டுதல் , குண்டு துளைக்கா பாதுகாப்பான பகுதிகளை அமைத்தல் என தன்னை வலுப்படுத்தியிருக்கின்றது

இதெல்லாம் நடக்கும்பொழுது அவர்கள் எல்லைக்குள் ஏதோ செய்கின்றார்கள் என இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை

சிலரோ இந்திய ராணுவ உளவுதுறை அனுப்பிய எச்சரிக்கையினை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றார்கள்.

இப்பொழுது எல்லாம் தயார் என்ற நிலையில் வீரர்களையும், மலைபகுதி சண்டைக்கென்றே தயாரான ZBL- 09 ரக டாங்கிகளோடு வந்திருக்கின்றது

இவ்வகை டாங்கிகள் வித்தியாசமானவை மலைபகுதியில் அட்டகாசமாக ஊடுருவும், கரடு முரடு , மேடு பள்ளம் எல்லாம் இவற்றை பாதிக்காது

சீன கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இந்தியாவின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கலாம்

சுருக்கமாக சொன்னால் பெரும் யுத்தத்திற்கு தயாராக வந்தாய்ற்று சீனா, இந்திய படைகள் டோக்லஹாமில் உண்டு என்றாலும் சீன அளவுக்கு பெரிதுமில்லை, தயாரிப்புமில்லை

இனி மறுபடியும் டோக்லஹா பற்றி எரியலாம்

இந்த 5 மாதமாக இந்தியா என்ன செய்தது என்றால் உங்களுக்கே தெரியும் உபி, குஜராத் என தேர்தலில் பிசியோ பிசி

ஆக ஒரு போருக்கு ஆனானபட்ட சீனா 5 மாதம் தயாராகி வந்திருக்கின்றது, இனி இந்தியா எப்படி தயாராகுமோ தெரியாது, எவ்வளவு நாளெடுக்குமோ தெரியாது

ஏன் இந்தியா இவ்வளவு மெத்தனமாயிற்று?

ஆர்.எஸ்.எஸ் மூன்றே நாளில் மாபெரும் ராணுவத்தை திரட்டும் என மோகன் பகவத் சொன்னதை அரசு நம்பி தொலைத்திருக்குமோ?

இல்லை டோக்லஹாமில் சர்ச்சை வந்தவுடன் 3 நாளில் ஆர்.எஸ்.எஸ் உங்களை இல்லாமல் செய்யும் என சீனாவினை மிரட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மோடி பேசவிட்டிருப்பாரோ?

ஒரு சாத்தியம் இருக்கின்றது அதாவது, சீன ராணுவத்தின் பெயர் “மக்கள் விடுதலை படை” அல்லது “சீன மக்கள் படை”

இதனை அரைகுறையாக தெரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஓஹோ சீன மக்கள் சண்டைக்கு வருவார்கள் போல நாம் நமது டவுசர் படையுடன் சென்று விரட்டிவிடலாம் என கணக்கு போடுவார்களோ என்னமோ?

விரைவில் பெரும் சர்ச்சைகள் டோக்லஹாமில் வரலாம் போலிருக்கின்றது, அது மோடியின் விதியினை தேர்தலில் நிர்ணயிக்கும் விஷயமாகவும் மாறலாம்.

இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் சீனா முழு வேகத்துடன் டோக்லகாமில் நிலையெடுக்க, கடந்தவாரம் டோக்லஹாமிற்கு அருகில் மிசோரமில் பேசிய உள்துறை அமைச்சர் இந்தியா எந்த சண்டைக்கும் தயார் என பாகிஸ்தானுக்கு சவால் விட்டுகொண்டிருந்தார்

அவர் காலடியில் குழி வெட்டி கொண்டிருந்திருக்கின்றது சீனா.