தொடரும் காவேரி போராட்டம்


கன்னட அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கடை அடைப்பு போராட்டம்

இதே வள்ளியூர் பெரிய குளத்திற்கு நீர் மேற்கு குளங்களில் இருந்துதான் வரவேண்டும், அவர்களோ நன்றாக நிரப்பி விட்டு மீதி இருந்தால் கொடுப்பார்கள்

வள்ளியூர் குளம் முழுக்க நிரம்பி பன்னெடுங்காலம் ஆகின்றது

அருகிருக்கும் திறுக்குறுங்குடி குளத்தில் இருந்து 1 லிட்டர் தண்ணீரை இவர்கள் கொண்டுவரமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது

இந்த வள்ளியூர் மக்கள்தான் எங்கோ இருக்கும் கன்னட அரசை கடுமையாக கண்டிக்கின்றார்களாம்.


ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், அதற்காக டோல்கேட்டினை அடித்து நொறுக்கிய வேல் முருகனின் அடாவடிதனம் கண்டிக்கதக்கது

நிச்சயம் இது சட்டம் ஒழுங்கை மீறிய செயல், இதனை பார்த்த எல்லோரும் அவர்மீது நடவடிக்கை எடுக்கா பட்சத்தில் தைரியமாக கண்ணில் பட்டதைஎல்லாம் நொறுக்க நேரிடும்

எல்லோரும் அப்படி கிளம்பினால் ஏராளமான சேதமும், உயிர்பலியும் உண்டாகும். பொது சொத்து முதல் பொதுமக்கள் வரை பெரிதும் அழிவு வரும்

ஆளாளுக்கு சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பதை ஏற்றுகொள்ள முடியாது , இது மகா ஆபத்தானது

உடனடியாக கடும் தண்டனையில் தூக்கி போட வேண்டியவர் வேல்முருகன்


மு.க.ஸ்டாலின் போராட்ட நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

ஒரு நாடககாரனுக்குத்தான் கண்ணில் படுவதெல்லாம் நாடகமாகவே தோன்றும் என்பார்கள்

இவர்களின் பழனிச்சாமி அரசு போடாத நாடகமா? அதில் இவர் நடிக்காத நடிப்பா

மிஸ்டர் ஜெயக்குமார், முன்பு மாதம் மும்முறை டெல்லி பறந்த உங்கள் ராஜபார்ட் பழனிச்சாமி காவேரி சிக்கலில் ஏன் டெல்லி செல்லவில்லை?

நாடகம் போட்டுகொண்டிருப்பது யார்?