ண்ணாமலை பல்கலைகழக சம்பவம்

அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்

விஷயம் இதுதான்

அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது

அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும்? ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் என்பதுமாக ஏக கேள்விகள், அது போராட்டமாக வெடித்தது

உச்சமாக ஒரு கழுதை கழுத்தில் டாக்டர் என எழுதிகட்டி அண்ணாமலை பல்கலைகழகத்தில் உலவவிட்டனர்

கலைஞர் அதன் பின் அந்த பட்டத்தை வாங்கியிருக்க கூடாது, நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்

ஆனால் அவரோ சென்றார், டாக்டர் ஆனார் திரும்பினார்

அன்று மாலைதான் அந்த கோரம் நிகழ்ந்தது, எல்லாம் முடிந்த பின்பும் போராட்டகாரர்களை அடக்குவதாக விடுதியில் காவல்துறை புகுந்தது, பெரும் அராஜகம் நிகழ்ந்தது

மறுநாள் அருகிலிருந்த குளத்தில் பிணமாக மிதந்தான் உதயகுமார், போராட்டம் தீவிரமானது

உதயகுமாரின் தந்தை ஆசிரியர், ஆனால் அவரே வந்து பார்த்துவிட்டு இது என் மகன் அல்ல என எழுதி கொடுத்தார், அவ்வளவு இறுக்கமான காலம் அது

அது உதயகுமார் இல்லை என்றால் அவன் எங்கே? என மாணவர்கள் போர்கொடி தூக்கினர், ஆனாலும் ஹேவியஸ் மனு எல்லாம் தாக்கல் செய்யவில்லை

இது சட்டமன்றத்தில் எதிரொலித்தபொழுது மாணவர்கள் தன்னை கொல்ல சதி செய்ததாகவும், செத்தது உதயகுமார் இல்லை என காவல்துறை அறிக்கை கொடுத்ததாகவும் சொன்னார் முதல்வர் கலைஞர்

அதன் பின் அரசு ஒரு கமிஷனை அமைத்தது, என்.எஸ் ராமசாமி என்பவர் அதன் தலைவர்

விசாரணை இந்த ஜெயா ஆறுமுகசாமி கமிஷன் போல நடந்தது, ஆளாளுக்கு விசாரித்தார்கள்

முடிவில் இறந்தது உதயகுமார்தான், ஆனால் அது எதிர்பாராதது அதற்கும் போலிஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என முடித்து கொண்டது

அதாவது தானே செத்தான் உதயகுமார் என்பது போல் எல்லோரும் முடித்துவிட்டார்கள்

இது 1971ல் நடந்தது, 1978ல் ராமசந்திரன் முதல்வரானதும் இந்த விவகாரம் வெடித்தது, அதை தொடங்கியவர் உதயகுமாரின் தம்பி மனோகரன்

அவர் ராமசந்திரனுக்கு கடிதம் எழுதினார், அதில் அந்த சம்பவத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர் பல வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் பின் அது நடக்காமல் போனதாகவும், தனக்கு வேலைவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறபட்டது

கலைஞர் உதயகுமார் குடும்பத்தை ஏமாற்றிய வகையினை பாரீர் என அதிமுக கும்பல் அதை ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபட்டது

அதன் பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன‌

இப்பொழுது அதெல்லாம் பழங்கதை, திமுகவினரிடம் கேட்டால் அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவே இல்லை, இது பார்ப்பண ஆரிய சதி என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்