தங்க தலைவிக்கு பெரும் சோகம்
தங்க தலைவிக்கு பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது, யார் கண் பட்டதோ தெரியவில்லை அவரின் மனம் துயரில் நிறைந்துவிட்டது
ஆம் தலைவியின் வளர்ப்புநாயான Chilli இறந்துவிட்டது. தலைவி அமைச்சராக வரும்பொழுது வாலாட்டி வரவேற்க காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை
தலைவியின் துயரில் சங்கம் பங்கெடுக்கின்றது, அந்த ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றது, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது
அருமை தலைவியின் வீட்டை காத்த அந்த காவல்கார ஜீவனுக்கு துக்கம் செலுத்தும் விதமாக சங்க நடவடிக்கைகள் ரத்து செய்யபடுகின்றன
சங்கத்து கொடி அரை கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கபடுகின்றது
தங்க தலைவியின் வீட்டு காவலாக இருந்த அந்த ஜீவனுக்கு சங்கம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி தலைவிக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவிக்கின்றது.