தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்

தமிழகத்தில் நிகழும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான். தஞ்சை ஆலயம் தமிழரின் கட்டடகலையினை, கல்லிலே தமிழன் கண்ட கலையழகை உலகெல்லாம் சொல்லிகொண்டிருக்கும் மிக பெரும் அடையாளம்

உலகமே ஒப்புகொண்டிருக்கும் விஷயம்.

அந்த புராதனமிக்க ஆலயத்தின் சிலைகள் கடத்தபட்டிருக்கின்றது என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அது

ராஜராஜன் அதனை மாபெரும் கலைபொக்கிஷமாக படைத்தான், அவன் வாழ்வும் அதில்தான் கழிந்தது

அக்கால தமிழ் மன்னர்கள் கோவிலிலே வசித்தவர்கள், இதனால்தான் தனியாக அவர்களுக்கு அரண்மனை கிடையாது. தஞ்சை ஆலயம் கூட அகழி எல்லாம் கொண்டு பாதுகாப்பு மிக்கதாகவே அமைக்கபட்டது

என்ன சாபமோ தெரியவில்லை அக்காலத்தில் இருந்தே அது ஒதுக்கியே வைக்கபட்டது. பழனி, திருச்செந்தூர் என கொண்டாடபடும் ஆலயங்கள் வரிசையில் அது இல்லை

அதனை கட்டியவன் பெயரே மறையும் அளவிற்கு அது ஒதுக்கிவைக்கபட்டது, பின்னாளைய நாயக்க, மராட்டிய மன்னர்களும் அதில் ஆர்வம் செலுத்தவில்லை

பின்பு ஜெர்மானியன் ஒருவன் தமிழ்படித்தே அதனை கட்டியது ராஜராஜன் என சொன்னான், அதன் பின்னே அதன் புகழ் பரவ தொடங்கியது

ஆனால் தமிழனின் மாபெரும் அடையாளம் அது என்பதை மறுக்க முடியாது, இடைபட்ட காலங்களில் அதன் வரலாறு தெரியாமல் போனது அவ்வளவே

மற்ற இனங்கள் குறிப்பாக ஐரோப்பிய இனம் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலே கல்லில் கலைவடித்த பெருமைகுரிய தமிழனின் அடையாளம் அச்சிலை.

அம்மாதிரி சிலைகளை இப்பொழுது செய்யமுடியுமா என்றால் செய்யலாம், ஆனால் அந்த பழங்காலம் கிடைக்குமா? அச்சிலையின் பழமை கிடைக்குமா என்றால் ஆண்டவனாலும் முடியாது

அதனால்தான் அச்சிலை மேற்குலகால் அப்படி கொண்டாடபடுகின்றது

அமெரிக்கனின் வரலாறு 500 ஆண்டுகள் கூட இல்லாதது என்பதால் இம்மாதிரி சிலைகளின் அருமை அவர்களுக்கு தெரிகின்றது, நமக்கு தெரியவில்லை

மனதை கனக்க செய்யும் பெரும் அதிர்ச்சி செய்தி இதுதான்,

அன்று ஐரோப்பியர் காட்டுமிராண்டியாக அறிவற்று இருந்தபொழுது கலையின் உச்சத்தில் இருந்த தமிழகம், இன்று அவர்கள் அறிவாளிகளாக இருக்கும்பொழுது காட்டுமிராண்டி இனமாக மாறிற்று என சொல்வதை தவிர ஒன்றும் சொல்ல முடியாது

இனி இருக்கும் சிலைகளையாவது காக்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும், இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அக்கோபுரத்தையும் கடத்திவிடுவார்கள்

சொல்லமுடியாது, கல்குவாரிக்கு விற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

மிக மதிப்பான ஒரு பொருள், அதன் அருமை தெரியாதவன் கையில் கிடைத்தால் பன்றிக்கு முன்பு முத்து இருப்பதை போலத்தான் ஆகும்

எத்தனையோ படையெடுப்புகள் , மாலிக்காபூர் போன்ற அட்டகாச கொள்ளையர்கள் என பல மிரட்டல்களை எல்லாம் அசால்டாக கடந்த தஞ்சை கோவில் சிலைகள், தமிழனை தமிழனே ஆளும்பொழுது கடத்தபட்டிருப்பதுதான் மகா சோகம்

 
 
LikeShow More Reactions

Comment

Comments
Soman Raja
Soman Raja அனைத்து சிலைகளும் குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாம்

Manage

 
LikeShow More Reactions

 · Rep