தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

Image may contain: 1 person, smiling, sittingதடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

இந்நாட்டின் மிக பெரும் தடவியல் மேதை அவர், இந்நாட்டிற்கு தன் பணியால் பெரும் தொண்டு செய்தவர்

உலகமே இதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லபட்ட ராஜிவ் கொலை வழக்கின் தடயவியல் சோதனையினை இவர்தான் செய்தார்

அவர் ஒரு தமிழர், நாகபட்டினத்துக்காரர். ராஜிவின் கொலையினை செய்தது வெளிநாட்டு தமிழ் தீவிரவாதிகளாக இருந்தாலும் மிக நுட்பமாய் விசார்த்து உண்மையினை கொண்டுவந்தது கார்த்திகேயம், சந்திரசேகர் போன்ற இந்திய தமிழர்கள்

Jebamani Mohanraj போன்ற காவல்துறை தமிழர்கள் உயிரை பணயம் வைத்து போராடியதையும் மறக்க முடியாது

இவர்கள் எல்லாம் நாட்டுபற்று மிக்க இந்தியர்கள், இவர்களால் தமிழகம் பெருமையடைகின்றது

ஒவ்வொரு தடயமாக இவர் சேகரித்து மனித வெடிகுண்டு எப்படி வெடித்தது என விளக்கியபொழுது உலகமே அதிர்ந்தது,

அவர் இடத்தில் இன்னொருவர் இருந்து அவருக்கு கொஞ்சம் விஷய ஞானம் குறைந்தாலும் ராஜிவ் கொலைவழக்கு இன்றும் மர்மமாகவே இருக்கும், புலிகளின் சூட்சுமம் அப்படி இருந்தது

ராஜிவ் கொலைவிசாரணையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துகொடுத்தவர் அவர்தான், இலங்கை வன்னிகாட்டில் தீட்டபட்ட கொலைசதியினை கண்டுபிடிக்கும் ஆற்றல் இந்தியருக்கு உண்டு என நிரூபித்தவர்

மிகபெரும் தடவியல் சோதனைகளில் எல்லாம் புதுவடிவத்தை சோதித்து வெற்றிகண்டவர், உலகளவில் அவருக்கு பெரும் மரியாதை இருந்தது

புது புது விஞ்ஞான முன்னேற்ற தடயவியல் விஷயங்களை எல்லாம் இந்தியாவிற்கு தருவித்தவர்.

அன்னாருக்கு இந்த தேசம் தன் வீரவணக்கத்தை செலுத்துகின்றது