தனுஷ்கோடி புயலில் அழிந்த சம்பவம் நடந்து 53 ஆண்டுகள் ஆகின்றன
சுனாமி எப்படி இருக்கும் என நமக்கு 2004 வரை தெரியாது, தெரிந்த பின்பு பட்ட கலக்கம் வாழ்நாள் வரை தீராது
அப்படித்தான் புயல் என்பது எவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தும் என்பது தனுஷ்கோடி அழிவில்தான் தமிழகத்திற்கு புரிந்தது. ஒரு ஊரே புயலில் அழிந்த கோர சம்பவம் அது. ஆறா துயரம் அது
அது பழமை வாய்ந்த ஊர், ராமர் காலடிபட்ட இடமாகவும் இருந்தது. வெள்ளையன் அந்த தனுஷ்கோடி வரை ரயில் இயக்கினான், அங்கிருந்துதான் இலங்கையின் தலைமன்னார் வரை கப்பல்கள் இயங்கின, மலையக தமிழர் என்ற்தெல்லாம் அந்த வழிதான்
அந்த தனுஷ்கோடி 53 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது, அதற்கு பின் சுவடுமட்டும் மிஞ்சி இருக்கின்றது
இன்று ஓரளவு செயற்கை கோள்வசதிகள் முதல் கண்காணிப்பு முறைகள் இருக்கின்றன, ஓரளவு சொல்லவாவது முடிகின்றது, அபப்டியும் ஓக்கி புயல் போன்ற விஷயங்களில் சறுக்க்குகின்றோம் என்றால் அன்று எப்படி இருந்திருக்கும்?
இதே டிசம்பர் 22 நள்ளிரவு அந்த ஊரை முதல் மழையாகத்தான் புயல் தாக்கிற்று,நேரம் செல்ல செல்ல தாண்டவம் ஆடியது புயல், எழுந்த ஆர்பரிப்பான அலைகள் நடு தீவு வரைக்கும் தாக்கின, வாரி சுருட்டபட்டது தனுஷ்கோடி
ஊர் மூழ்கியது, ஊருக்கு சென்றுகொண்டிருந்த ரயில் மூழ்கியது மொத்தமாக அந்த ஊரை அழித்துவிட்டு சென்றது அந்த கொடும்புயல்
மொத்தமாக செத்தது 1500 பேர் என அரசு சொன்னாலும் செத்தவர்கள் ஏராளம், மிக சிலரே உயிர்பிழைத்தனர்
ராமேஸ்வரம் எப்படியோ தப்பியது
உயிர் தப்பியவர்களில் சாவித்திரியும், ஜெமினிகணேசனும் முக்கியமானவர்கள், காரணம் அவர்கள் புயலடிக்கும் முன் ராமேஸ்வரம் வந்திருந்தார்கள்
ஆக பின்பு சாவித்திரி கவலையில் குடித்து சாகவும், ஜெமினி இன்னும் பல திருமணம் செய்யவும் அன்று பிழைத்திருந்தார்கள்
மொத்தமாக அழிந்த தனுஷ்கோடி அதன் பின் மனிதர் வாழ தகுதியற்ற இடமாயிற்று, ஒர் இரு மீன்பிடி குடிசைகள் பின்னாளில் தோன்றின, இன்றும் மின்சாரமில்லை, குடிநீர் இல்லை
ஆனால் சுற்றுபயணிகள் சென்று பார்த்துவிட்டு வருகின்றார்கள், சில சினிமாக்களிலும் தனுஷ்கோடி இடம்பிடிக்கின்றது
பலநூறு வருடங்கள் சீரும் சிறப்புமாக இயங்கிய தனுஷ்கோடியினை ஒரே இரவில் மயான அடையாளமாக்கியது புயல், மதம் கொண்ட யானை பாகனை கொன்றுவிட்டு மதம் அடங்கியபின் அவன் உடலருகே நின்று கண்ணீர் வடிப்பதை போல அடங்கி கிடக்கின்றது கடல்
இப்பொழுது நடப்பது பாஜக ஆட்சி அல்லவா? ராமர் சம்பந்தபட்ட இடம் என்றால் அவர்களுக்கு உள்ளே ஒரு சாமி இறங்க்குமல்லவா? அப்படி இறங்கி தனுஷ்கோடிக்கு பல திட்டங்களை அறிவிக்கின்றார்கள், தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை பாலம் அமைக்கும் திட்டமும் அதில் ஒன்று
மத்திய அரசின் கவனம் தனுஷ்கோடி மீது திரும்பியிருப்பதால் அது பழம் நிலையினை அடையலாம், ஆனால் அந்த சுவடு நீங்காது
ஒரு கொலை நடந்தாலே அதனை சினிமாக எடுக்கும் தமிழக சினிமாக்காரர்கள் தனுஷ்கோடியினை விடுவார்களா? அச்சம்பவத்தினை அடிப்படையாக வைத்து சினிமாத்தனம் கலந்து எடுக்கபட்டதுதான் அஜித்குமாரின் சிட்டிசன் படம்
“ஏஏஏஏஏஏ .. கக்க்க்க்க்க் ….லெக்டர், ஏ… ட்ட்டி ஏஎஸ்ஸ்ஸ்ஸ் பீஈஈஈஇ” என கிளைமேக்ஸில் வசனம் எல்லாம் பேசி நம்மை சிரிக்க வைத்தாரே, அந்த சிட்டிசன் படம்
அஜித்குமார் நடித்த மிகபெரும் காமெடி படத்தில் அதுவும் ஒன்று, மனிதர் அவ்வளவு சீரியசாக காமெடி செய்திருந்தார், அதுவும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் சிரித்து முடியாமல் தியேட்டரை விட்டு ஓடி வந்ததெல்லாம் நினைவிருக்கின்றது
தனுஷ்கோடி புயலில் அழிந்த சம்பவம் நடந்து 53 ஆண்டுகள் ஆகின்றன, அதில் இறந்தோருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், இன்னொரு புயல் அப்படி வராமல் போகட்டும்