தன் பாதுகாப்பில் இருந்த வீடியோ வெளியானது எப்படி? : விவேக் ஜெயராமன்

தன் பாதுகாப்பில் இருந்த வீடியோ வெளியானது எப்படி? அதிர்ச்சியில் இருக்கின்றார் விவேக் ஜெயராமன் : செய்தி

பின் எதற்கு 200 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள்? வெறுங்கையோடு செல்ல அவர்கள் என்ன விஜயகாந்தா?

எத்தனை கில்லாடிகள், எத்தனை உளவுதுறைகள், எவ்வளவு தொழில்நுட்பம் கொண்டவர்கள் எல்லாம் உலாவும் இடம் அரசு துறை. கண்ணை காட்டிவிட்டால் தகவலை கொட்டிவிட மாட்டார்களா?

ஆக எப்படியோ ஏதோ ஒரு சக்தி ஊடுருவி விவேக் ஜெயராமனின் வீடியோவினை கைபற்றி நினைத்ததை சாதித்துவிட்டது, தினகரனுக்கும் விவேக்கிற்கும் போர் வெடித்துவிட்டது என்கின்றார்கள். போர் ஆமாம் போர்.

இம்மாதிரி காரியங்களில் மொசாத் எப்பொழுதும் கில்லாடி, ஒருவனின் போனையோ அல்லது லேட்பாப்பினையோ அடுத்த டேபிளில் காப்பி குடித்து கொண்டே ஊடுருவி தகவலை திருடிவிடுவார்கள்.

அதாவது விஞ்ஞான உலகில் எதுவுமே பாதுகாப்பில்லை, அதுவும் விவேக் போன்ற குறிவைக்கபட்டவர்களை விடுவார்களா என்ன?

விவேக் என்பவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதாக செய்திகள் வருகின்றன, அதனால் இனி கொஞ்ச நாளைக்கு நல்ல நிகழ்ச்சிகள் ஜெயா டிவியில் வராது, அதாவது குஷ்பு படங்கள் ஜெயா டிவியில் வராது

வேறு டிவிபக்கம் குஷ்பு படம் வருமா என தேடவேண்டியதுதான், நம் கவலை நமக்கு