தமிழகத்தின் இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம்

மதுரைக்கும் கயிலாயத்திற்கும் சில தொடர்புகள் இருப்பதை நம்பத்தான் வேண்டி இருக்கின்றது, மதுரை ஆலயத்தை அடுத்து திபெத்திலும் தீவிபத்து ஏற்பட்டிருக்கின்றது

ஆம், திபெத் என்பதே அக்கால கையிலாய பகுதிகள், அங்குதான் புத்த விகாரையாக மாற்றபட்ட ஆலயம் எரிந்திருக்கின்றது, ஒரு பக்கம் திகைப்பும் ஆச்சரியமும் கொண்ட விஷயம் இது

இதனை விட இன்னொரு விஷயம் தமிழகத்தில் எரியதொடங்கியாயிற்று, பழனிச்சாமிக்கு மகா சிக்கலான விஷயம்

அதாகபட்டது தமிழகத்தில் இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம் என்றொரு பல்கலைகழகம் உண்டு

பல்கலைகழகம் என்றால் அதற்கொரு துணைவேந்தர் உண்டல்லவா? அப்படி வீணை காயத்திரி என்பவர் இருந்தார்

அடுத்த துணைவேந்தராக நாம் நியமிக்கபடுவோம் என பல்லாண்டுகளாக அம்மா வாழ்க என பாடிய புஷ்பவனம் குப்புசாமி தனக்கு பதவி இல்லை என்றவுடன் விலகிவிட்டார்

ஆம் பதவி இப்பொழுது கேரளாவினை சேர்ந்த பிரமீளா என்பவருக்கு சென்றிருப்பதாக தமிழக அரசு அறிவித்துவிட்டது

இது புஷ்பவனம் குப்புசாமி தம்பதி ஒப்பாரி பாடல் பாடுவதற்கும் வழி செய்தது, இன்னும் பல கட்சிகள் தமிழனுக்கு இல்லாமல் மலையாளிக்கு பதவியா என கச்சை கட்டுகின்றன‌

வீணை காயத்திரியும் அம்மா எனக்கு பதவி நீட்டிப்பு உண்டு என உறுதியளித்தார் என சோக ராகம் மீட்டுகின்றார்

அட இசைபல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் என்றால் இளையராஜாவினை நிரந்தரமாக அமர்த்திவிட வேண்டாமா? அவரை தவிர யாருக்கு இருக்கின்றது தகுதி

பாடகர்தான் வேண்டுமென்றால் எஸ்பி அல்லது ஜேசுதாசை, ஜாணகியினை நியமித்தால் என்ன? இவர்களை விட பாடலில் சாதித்தது யார்?

சம்பந்தமே இல்லாமல் மலையாள பெண்ணை பழனிச்சாமி அரசு ஏன் நியமித்தது என்பதுதான் இப்பொழுது சர்ச்சை, சும்மாவா நியமிப்பார் அவர்

அடுத்த ஊழல் புகார் கிளம்புகின்றது, இது பெரும் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது

ஆக பல்கலைகழக துணைவேந்தர்கள் எல்லோருக்கும் போதாத காலமிது

அவரை நியமித்தால் என்ன? இவரை நியமித்தால் என்ன பல குரல்கள் வருகின்றன, சங்கமும் கவனிக்கின்றது

பல்கலைகழக பெயர் இசை மற்றும் கவின் கலை பல்காலைகழகமாம், கவின் கலைக்கு மிக பொருத்தமான கலைஞர் இப்பொழுது தமிழகத்தில் யார்?

சாட்சாத் தலைவி குஷ்புதான்

அவரைத்தான் அந்த பல்கலைகழக துணை வேந்தராக நியமித்திருக்க வேண்டும் என சங்கம் தன் கோரிக்கையினையும் வைத்தாயிற்று