தமிழகத்தில் என்.ஐ.ஏ

கோயம்பேடு சந்தைக்குள் வந்து கத்தரிக்காய் அள்ளி செல்வது போல அனுதினமும் தமிழகத்தில் என்.ஐ.ஏ அமைப்பு பலபேரை அள்ளி அள்ளி செல்கின்றது

இது மிகபெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது, தமிழகம் பல நாகங்கள் பதுங்கும் இடமாக இருக்கின்றது என்பதும், பெரும் கடத்தல் மற்றும் சமூகவிரோத கோஷ்டிகளின் அடைக்கல இடமாக இருக்கின்றது என்பதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்

ஆனால் ஊடகங்களும் இதுபற்றி விவாதிப்பதில்லை, மாகாண அரசும் இதுபற்றி கவலை கொள்வதில்லை, அரசியல் கட்சிகளும் இதனில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் பெரும் சோகம்

இவ்வளவுக்கும் முன்னாள் பிரதமர் இங்கு கொல்லபட்டிருக்கின்றார், ராணுவ தளபதி விபத்து நடந்தது, இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலின் எச்சரிக்கை இங்கிருந்து செய்யபட்டது என பல விஷயம் உண்டு

அப்படிபட்ட மாகாணம் இது

இதில் மிக கவனிக்கதக்க விஷயம் என்னவென்றால் போதை கடத்தல் தொழிலும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, குறைந்த முதலீட்டில் பெரும் பணம் குவித்து அதில் தீவிரவாதத்தை வளர்ப்பது பல இயக்கங்கள் செய்யும் காரியம்

இதனில் இரு நுட்பங்கள் உண்டு, ஒரு நாட்டில் இந்த இரண்டையும் பரப்பிவிட்டால் இரு பக்கம் பற்றி எரியும் தீயாக அவை நாட்டை நாசமாக்கும்

ஒரு பக்கம் கடும் போதை பொருள் அபாயம் இன்னொரு பக்கம் இப்படி கைதுகள் என்பதுதான் சூழ்நிலையினை யோசிக்க வைக்கும் விஷயம்

என்.ஐ.ஏ என ஒரு அமைப்பு மட்டும் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே அச்சம் மேலிடுகின்றது,

அந்த அமைப்புத்தான் அதுவும் சென்னையில் தொடங்கபட்ட அந்த கிளைதான் இன்று ஆறுதலை கொடுக்கின்றது