தமிழகத்தில் ஒன்றும் புயல் மழை கொட்டவில்லை

Image may contain: outdoor

தமிழகத்தில் ஒன்றும் புயல் மழை கொட்டவில்லை, தனுஷ்கோடியினை அழித்தது போல் கோர புயல் வீசவில்லை

பெய்திருப்பது , பெய்துகொண்டிருப்பது சாதரண மழை. வெகு இயல்பான மழை

அந்த மழை அதன் கடமையினை செய்கின்றது, ஆனால் இருந்த நீர் தேக்கங்களை எல்லாம் அடைத்து, கால்வாய்களை எல்லாம் மூடி இல்லாத அட்டகாசங்களை எல்லாம் செய்ய அனுமதித்தது அரசியல்

2015ல் வந்த எச்சரிக்கைக்கு பின்னும் தமிழக அரசு முழித்துகொள்ளவில்லை

இன்றைய சென்னையின் ஸ்தம்பிப்பு அதனைத்தான் சொல்கின்றது

மழைநீரும் மிக சரியாக தமிழகம் தேடுவதை போல கலைஞர் வீட்டுக்கே சென்று அவரை தேடியிருக்கின்றது

மனுநீதிசோழனிடம் முறையிட்ட பசுவின் நிலை நினைவுக்கு வருகின்றது

வெகு இயல்பான மழையினை தாங்க முடியாத அளவு தமிழகமெங்கும் விடுமுறை இன்னபிற அவசர நடவடிக்கைகள், எச்சரிக்கைகள்

ஏதோ அந்நிய நாடு படையெடுத்து வருவது போல பெரும் அலப்பரைகள்

ஏதோ பெரும் சூறாவளி தாக்கபோவது போல இம்சைகள், வெகு இயல்பான மழையினை தாங்கமுடியாத அளவுக்குத்தான் 6 வருடமாக இவர்கள் பராமரிப்பு இருந்திருக்கின்றது

அமெரிக்கா சிங்கப்பூர் எல்லாம் தமிழகத்தை அடுத்துத்தான் என பீத்தல் வேறு

எந்த நாட்டில் பருவமழைக்காக விடுமுறை விட்டார்கள்?

இந்த லட்சணத்தில் ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா, ஜெயாவிற்கு மணிமண்டபம்.,