தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றார்கள் …..
https://www.facebook.com/stanley.rajan.5/videos/10211188507163633/
சில நாட்களாக ஒரு சர்ச்சை வந்தது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றார்கள் என்பது
பொன் ராதாகிருஷ்ணன் கூட இதுபற்றி சொல்லியிருந்தார், பலர் எச்சரித்தனர், ஆட்சி டிஸ்மிஸ் என்பதுவரை பேசபட்டது.
ஆனால் எந்த பயங்கரவாதி? என யாரும் சொல்லவில்லை. நக்சலைட்டா, இஸ்லாமிய பயங்கரவாதமா? ஈழபுலிகளா என தகவல் இல்லை
ஆனால் சமீபத்தில் இந்த ஈழபுலி காசியானந்தான் தந்தி டிவியில் பகிரங்கமாக ஈழத்தில் ஆயுதம் ஏந்துவோம் எல்லா நாட்டு தமிழரும் ஆதரிபார்கள் என பேசியிருக்கின்றார்
அதுவும் சென்னையில் பேசியிருக்கின்றார்
இவ்வளவிற்கும் இவர் துப்பாக்கி தூக்கினாரா? தூக்குவாரா என்றால் இல்லை, இப்படி உசுப்பேத்தி யாராவது சாகவேண்டும் இவர் பேசிகொண்டே இருக்க வேண்டும், அதன் பெயர் போராட்டம்
இது பலத்த கண்டனத்திற்குரியது, பேசுபவர் இலங்கையில் பேசலாம் இல்லை ஐரோப்பாவில் பேசலாம். சென்னையில் வந்து மக்களை திரட்டுவது போல் பேசுவது நிச்சயம் பயங்கரவாத சதி
இவர் மேலோ அல்லது தந்தி டிவி மேலோ எந்த நடவடிக்கையுமில்லை என்பதால் பழனிச்சாமி அரசு பயங்கரவாதத்திற்கு துணை போவது போல் தெரிகின்றது என்கின்றார்கள்
ஆக ஆட்சி டிஸ்மிஸ் செய்யபடும் வாய்ப்புகளை பழனிச்சாமி அரசே உருவாக்கிகொண்டிருக்கின்றது
