தமிழகத்தில் பெரியார் சிலை உடையும்: எச்.ராஜா
திரிபுராவில் லெனின் சிலை உடைந்தது போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடையும்: எச்.ராஜா
அதானே, மசூதி இடிப்பது, சிலைகளை உடைப்பது, தாஜ்மஹாலுக்கு மிரட்டல் விடுவது இது போன்றவை தவிர இவர்களுக்கு ஆக்கமான செயல் என்ன தெரியும்?
ஒன்றும் தெரியாது
என்ன சொன்னீர் எச்.ராஜா , பெரியார் சாதி வெறியனா? சிரிக்காமல் சொல்ல உம்மால் முடிந்ததா?
மனுதர்மம் கொடுத்த சாதியினை நானும் சுமக்க மாட்டேன், என் இயக்கமும் சுமக்காது என வாழ்ந்தவர் அவர்
நீங்கள்தான் நாங்கள் பார்ப்பணர், எமக்கு அடையாளம் உண்டு என மல்லுகட்டினீர்கள் அவர் உங்களை உங்கள் விருப்படி அழைத்தார்
யாருக்கு இருந்தது சாதிவெறி? அவருக்கா உங்களுக்கா?
பெரியார் சிலைக்கே இப்படி அஞ்சும் கோஷ்டி, அவர் இருக்கும்பொழுது எப்படி எல்லாம் அஞ்சியிருக்கும்?
அய்யா ராசா, தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட முயற்சித்தீர்கள் முடியவில்லை, பிரியாணி அண்டா தூக்கி ஓடினாலும் கலவரம் வரவில்லை
ஆண்டாளை கொண்டு ரத்த ஆறு ஓடவைக்கலாம் என பார்த்த்தீர்கள், ஜீயர் என்றொருவர் உண்டு என்பது மட்டும் தெரிந்தது
ஆக என்ன முடிவிற்கு வந்திருக்கின்றீர்கள்?
தமிழக மதங்கள் விவகாரத்தால் உருவாக்க முடியாத கலவரத்தை பெரியார் சிலையில் கை வைத்தால் உருவாக்கிவிடலாம் என வந்துவிட்டீர்கள்
பெரியார் தமிழக மூல கடவுள் , அதில் கைவைத்தால் தமிழகம் பற்றி எரியும் என்ற முடிவு செய்துவிட்டீர்கள்
பெரியார் தமிழக கடவுள் என ஒப்புகொண்டதற்காக கோடான கோடி நன்றி மிஸ்டர் ராசா
ஆனால் ஒருவிஷயம் மறக்கின்றீர்கள் அய்யா
பெரியாருக்கு உங்களை போல மசூதி இடிக்க, கலவரம் செய்ய, சிலை உடைக்க தெரியாது
அவர் சிந்திக்க சொன்னார், சிந்தித்து அறிவுக்கு எட்டியதை செய்ய சொன்னார். ஒரு இடத்திலாவது பிராமணனை அவர் கும்பலாக சேர்ந்து அடித்தார் என்றோ, கோவிலுக்குள் சென்று சிலைகளை உடைத்தார் என்றோ சொல்ல முடியுமா?
பொய்சாட்சியாவது காட்ட முடியுமா?
நிச்சயம் அன்று வன்முறை செய்தது உங்கள் கோஷ்டிதான்
அவர் மீது செருப்பும் , கல்லும் இன்னபிற பொருட்களை எல்லாம் எறிந்து வன்முறை செய்தது உங்கள் கோஷ்டியே
அப்பொழுதும் “என் மீது ஒரு செருப்பை எறிந்தவனே இன்னொரு செருப்பை எறி இல்லாவிட்டால் இருவருக்குமே பயனில்லை” என்றும்
“என் மீது எரியும் கற்களால் வீடு கட்டலாமே தவிர என்னை கட்டமுடியாது” என்றும் சொல்லி அமைதியாக நடந்தவர் பெரியார்
அவர் சிலையினை நீங்கள் இடிக்கவருவதில் என்ன ஆச்சரியம்?
உங்களுக்கு இங்கு ஆட்சி அதிகாரம் இருப்பதாக இருந்தால் இடியுங்கள், யாரும் தடுக்க முடியாது.
ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்
காங்கிரஸின் இன்றைய வீழ்ச்சியினை அன்றே தொடங்கி வைத்தவர் பெரியார். இனி உங்கள் வீழ்ச்சியும் அவர் சிலையினை இடித்தே தொடங்கும் என்றால் செய்யுங்கள்
ஆனால் தமிழகத்திலிருந்து அவர் சிலையினை துடைத்தொழிப்பதாக எண்ணினால் இந்தியா முழுக்க பெரியார் சிலையாக எழுவார்
காரணம் பெரியார் இந்திய சமூக விஞ்ஞானி, இந்த சமூகத்தை நோய்பிடிக்கும் பொழுதெல்லாம் அவர் தேவைபடுவார்
இப்பொழுது ஒரு புதுவித நோய் உங்களை போன்ற வைரஸ்களால் பரவுகின்றது, இதன் தாக்கம் அதிகமாகும்பொழுது நிச்சயம் பெரியார் எழுவார்
நாங்கள் வன்முறையினை விரும்பாதவர்கள், உங்களை போல கரசேவை, கொலைச்சேவை, கடப்பாரை சேவை எல்லாம் எங்களுக்கு தெரியாது
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் சிந்தனை, பெரியார் சொல்லிகொடுத்த அறிவு சிந்தனை
அவர் சிலையினை ஒழித்துவிடலாம், அவர் கொடுத்த சிந்தனையினை உங்களால் பறிக்க முடியுமா?
உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது ராசா, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் கிரீடம் சூட ஆசைபடுகின்றீர்கள்
அது மொத்தமாய் எரித்துவிடும் அய்யா
பெரியார் சிலையாக அல்ல, அறிவாய் எம் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவர் கொடுத்த அறிவு தீ அப்படியே தமிழர் மனதில் எரிந்துகொண்டிருக்கின்றது
உங்களை போன்ற குப்பைகளை எரிக்க அந்த தீக்கு நெடுநேரம் ஆகாது, ஆனால் அந்த தீ தீண்டும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பதால் விட்டுவைத்திருக்கின்றது
மததத்தால் உருவாக்க முடியா கலவரத்தை, பெரியார் சிலையால் உருவாக்கிவிடலாம் என்றா கனவு காண்கின்றீர்கள், நடக்குமா?
ஒரு அடிமை முதல்வர் கிடைத்துவிட்ட அற்ப சந்தோஷத்தில் இப்படி நீர் கிளம்பலாம், இந்த பதர்களின் காலம் முடியும், தமிழகத்திற்கு விரைவில் விடியும்
அப்பொழுது இதே பெரியார் சிலையினை நீர் கண்ணீரால் கழுவும் காலமும் வரும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளும்
சிலையினை உடைத்தால் ஒழிந்து போக பெரியார் ஒன்றும் சின்னம் முடக்கினால் அழியும் கட்சி அல்ல , அரசியல்வாதியும் அல்ல
அவர் மனிதகுல மருத்துவர், அவர் கொடுத்த சிகிச்சைமுறை எக்காலமும் வாழும். அதுவும் உம்போன்ற சமூக வைரஸ்கள் இருக்கும்பொழுது அவர் அடிக்கடி தேவைபடுவார்
மதத்தின் பெயரால் சமூக ஏற்ற தாழ்வும், சாதி பெயரால் இழிவும் உள்ள காலமட்டும் அவர் நிலைத்திருப்பார்.
அவருக்கு அழிவே இல்லை மிஸ்டர் ராசா.
குரைக்கு நாயினை அடித்து ஒன்றும் ஆகபோவதில்லை, அடித்தால் அது குலைக்கும், எங்கோ இருக்கும் நாய்களும் அதை கேட்டு இன்னும் குலைக்கும்நா
நாயின் முதலாளியினை பார்த்து, அதை அவிழ்த்துவிட்டவனை பார்த்து செய்யவேண்டியதை செய்தால் நாய் அடங்கிகிடக்க போகின்றது
இதற்காக எல்லாம் கலவரம் வருமா என்ன?
பெரியார் கொடுத்த பகுத்தறிவு இதனை கூட யோசிக்காதா?