தமிழகத்தை உலுக்கிய விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் படுகொலை
கடந்த மாதம் தமிழகத்தை உலுக்கியது விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் படுகொலை
ஆராயி எனும் பெண்ணும் அவர் கொல்லபட்டதும், அவரின் மகள் கொடூர பாலியல் சித்திரவதை செய்யபட்டதும் உலகை உலுக்கிய செய்திகள்
அந்த கொடூர குற்றவாளியினை கைது செய்ததில் காவல் துறைக்கு பெரும் கவுவரமும் நிம்மதியும் வந்ததாக நினைத்தால் அதன் பின்புதான் காவல்துறைக்கு கத்தி வந்திருக்கின்றது
இந்த கொடூரன் செய்திருக்கும் கொலைகளையும் அவற்றின் தன்மையினையும் பார்த்தால் நிச்சயம் என்கவுண்டரில்தான் போடவேண்டும் அதுவே குறைந்தபட்ச தண்டனை.
அந்த கொடூர கொலையாளி தில்லைநாயகம் இக்கொலையினை அவன் தான் செய்ததாக ஒப்புகொண்டான் அதுவரை நிம்மதி
திருட்டு வழக்கில் அவனை சந்தேகத்தில் பேரில் விசாரிக்கும் பொழுதுதான் அவன் 2010ல் இருந்து செய்த சைக்கோ கொலைகள் எல்லாம் வெளிவந்தன
அதாவது இக்கொலைக்கு முன்பே கொலையும், 18 கற்பழிப்புகளும் செய்ததாக அவன் ஒப்புகொண்டபொழுது காவல்துறை ஆடிவிட்டது
காரணம் இந்த வழக்குகளில் ஏற்கனவே பலரை குற்றவாளி என கோப்பை மூடியிருந்தது காவல்துறை
ஆக நிரபராதிகள் பலர் செய்யாத குற்றத்திற்காக தண்டனையில் உள்ளனர்
நிச்சயம் இது சாதாரண விஷயம் அல்ல, பெரும் நஷ்ட ஈடு கோரும் விஷயமும் காவல்துறைக்கு பெரும் சோதனைகளை கொண்டுவரும் விஷயம்
மனித உரிமை குழு, அது இது என வரிசை கட்டி வந்தால் பெரும் குழப்பமும் சவாலும் காவல்துறைக்கு வரலாம்
தமிழக ஊடகங்கள் இப்படிபட்ட செய்திகளை நிச்சயம் வெளிகொண்டு வராது, இவர்கள் நோக்கமே வேறு
ஆக தில்லைநாயகம் செய்த 15க்கும் மேற்பட்ட கொலைகளில் பல நிரபராதிகள் தண்டிக்கபட்டார்களா? எனும் சர்ச்சை கிளம்புகின்றது
இவ்விஷயம் பரபரப்பாகுமா? இல்லை மூடப்படுமா என்பது விரைவில் தெரியும்.
காவல்துறையும் அம்மாதிரி வழக்குகளில் பலமுறை சிறை சென்ற சந்தேக நபர்களைத்தான் கைது செய்திருக்கும் என்பதால் பெரும் சிக்கல் வராது என்கின்றன செய்திகள்