தமிழகத்தை நேசிப்போர் அந்த பட்டினத்தார் சமாதியில் தியானம் செய்யலாம்…

No automatic alt text available.

தமிழகத்தில் ஜெயா, அண்ணா, எம்ஜிஆர் சமாதி என சுற்றிகொண்டிருக்கின்றார்கள், அதில் தியானம் எனும் இம்சை வேறு

உண்மையில் தியானம் செய்யவேண்டிய சமாதி சென்னை திருவொற்றியூரில் உண்டு, பட்டினத்தாரின் சமாதி அது.

பெரும் பணக்காரனான அவர், சொத்துக்களுக்கு ஆசைபட்ட உறவினர் பெண்ணின் நாடக‌ வாழ்வினை வெறுத்து ஞானியாகி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தார்

பெண்ணால் பெரும் அழிவுவரும் என சொன்னது அவர், அதனால் பெண்ணால் பாதிக்கபட்ட மன்னர்கள் எல்லாம் அவருக்கு சீடரானார்கள், பத்ருஹரி மகாராஜாவும் ஒருவர்

இன்றும் பட்டினத்தார் பாடல்கள் செல்வத்தால் வரும் ஆபத்து பற்றியும், பெண்களின் பேராசை பற்றியும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌

இங்கு ஜெயா சமாதியில் எல்லோரும் தியானம், சசிகலா தியானம், பன்னீர் தியானம் தீபா தியானம், இப்பொழுது தீபா கணவர் தியானம் என அந்த சமாதி தியான பூமியாகிகொண்டிருக்கின்றது

ஆனால் உண்மையில் இவர்கள் தியானம் செய்துவிட்டு அரசியலை விட்டு ஓடவேண்டிய இடம் பட்டினத்தார் சமாதி

இவர்கள் இந்த நாடக சமாதியினை சுற்றிவந்து தமிழகத்தை வெறுப்பேற்றும்பொழுதெல்லாம் அந்த திருவொற்றியூரின் பட்டினத்தார் சமாதியே நினைவுக்கு வருகின்றது

பெண்ணால் கெட்டோம், நடிப்பால் கெட்டோம், பேராசையால் கெட்டோம் என தமிழர்கள் சுற்றவேண்டிய சமாதி அதுதான்

இந்த போலிகள் ஜெயா சமாதியினை சுற்றிகொண்டே இருக்கட்டும்

தமிழகத்தை நேசிப்போர் அந்த பட்டினத்தார் சமாதியினை நினைத்துகொள்ளலாம்..