தமிழகமும் சமணமும்.
ஏப்ரல் 1 2015ல் முகநூலில் பதிவு செய்தது.
தமிழகமும் சமணமும்.
பண்டைய இந்தியாவில் அவ்வப்போது சில மகான்கள் உதித்தார்கள். உலகம் நிலையற்றது என்பதனையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வாழும் முறையையும் சொல்லி கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வர்த்தமானர், 24ம் தீர்த்தங்காரர் அல்லது மகாவீரர் என்று அழைக்கபடும் மகான்.
அவர் ஒன்றும் ஆள்திரட்டி அடித்து ஒடுக்கிய மாவீரனோ அல்லது மகா அரசனோ அல்ல, தன்னை வென்றார். அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிட்டார், சொல்லபோனால் மக்களின் மனங்களை ஜெயித்தவீரர், அந்த மகாவீரர். அவர் உருவாக்கியது சமண மதம் அல்லது இன்றைய “ஜெயின்”
பீகாரில் பிறந்தார், ஞானம் பெற்றார்,போதித்தார் என ஏராளமான செய்திகள் அவர் வரலாறு திரும்பிய பக்கமெல்லாம் கொட்டி கிடக்கின்றது, அக்கால 2ம் வகுப்புபாடத்திலே அவர் பிரதானம். ஆனால் அவரின் மதத்தால் யார் பெரும் பலன்கள் பெற்றார்கள் என்றால் நிச்சயமாக சொல்லலாம் தமிழகம் தான்.
சமண முனிவர்கள் தமிழகமும் வந்தார்கள். ஒரு காலத்தில் தமிழகம் முழுக்க அம்மதம் இருந்தது. புத்ததுறவிகள் தங்கும் இடம் மடம் அல்லது மடாலயம் என அழைக்கபட்டது போல, சமண துறவிகள் தங்கிய இடம் பள்ளி, அதாவது ஓய்வெடுக்கும் இடம். (இன்னும் விளக்கம்வேண்டுமென்றால் பெருமாள் கோயியிலில் திருப்பள்ளி எழுச்சி பாடினால் புரியும்).
உண்மையில் சமணதுறவிகள் ஒய்வெடுக்கும் இடத்தில் கல்வி கொடுத்தார்கள், அக்கால பாடங்களை போதித்தார்கள். அதனால்தான் தமிழகத்தில் கல்வி கற்கும் இடம் இன்றுவரை “பள்ளி” என்றே நிலைத்து நிற்கின்றது.
மனிதனை மனிதனாக வாழவைக்கும் ஒரேவிஷயம் கல்வி என்பது அவர்கள் கோட்பாடு, மனிதனை பண்படுத்துதல், நல்லவிஷயங்களை கற்றுகொடுத்தல் என்பது அவர்களின் பிரதான கொள்கை.
சமணதுறவிகள் அற்புதமான காவியங்களை கொடுத்தார்கள், ஐம்பெரும் காப்பியத்தில் 4 அவர்கள் கொடுத்தது, ஐங்குறுகாப்பியத்திலும் அவர்கள் பங்கு குறைவில்லை.
அதாவது தமிழக இலக்கிய உலகம் அன்று அவர்களால்தான் தொடங்கி வைக்கபட்டது, அவர்கள் இல்லாமல் அழியா காவியங்கள் இல்லை. தமிழர்களின் கலைசொத்து என கொண்டாடும் அக்காப்பியங்களில் எல்லாம் வரும் பாத்திரம் பெரும்பாலும் சமணர்கள் பாத்திரம். அன்றைய தமிழகம் அப்படித்தான் இருந்திருக்கின்றது.
இருண்டதமிழகத்தில் அவர்கள் வருகைக்கு பின் தமிழகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது என்பது உண்மை.
சித்தன்னவாசல் ஓவியங்கள்,அற்புதமான கல் சிற்பங்கள் என தமிழகத்தின் கலைதுறைக்கும் அவர்களின் பங்கிற்கு குறைவில்லை.
ஆனால் பெரும் துயரம் அல்லது தவறு வரலாற்றிலும் நடந்தது.
மதத்திற்கு குறைவில்லாத அல்லது மதம் காரணமாக மோதிகொள்ளும் நாடுகளில் வரிசையில் இந்தியாவின் இடம் என்றும் அழிக்கமுடியாதது.
அப்படித்தான் அன்றிலிருந்தே இருந்திருக்கின்றது. எதிர்சண்டையிட ஆளில்ல்லா காலத்தில இந்துமதம் சைவம் , வைணவம் என மோதிக்கொண்டது, பின்னாளில் புத்தமதமும், சணமதமும் இரட்டைகுழல் துப்பாக்கி என தாக்க, இந்து மதம் சைவ.வணவ சண்டைகளை விட்டுவிட்டது.
பின்னாளில் ஆதிசங்கரால் மறுமலர்ச்சி பெற்ற இந்துமதம் (இனி அந்த சங்கரர் மறுமலர்ச்சி எல்லாம் வரலாறில்லை, 1940களில் டெல்லிபக்கம் கொடிபிடித்துகொண்டிருந்தவர்கள்தான் இனி இந்து மறுமலர்ச்சியாளர் , காலகொடுமை) வீறுகொண்டெழுந்தது.
அன்று பைபிள்,குரான்,கிரந்தசாகிப் எல்லாம் இல்லை. ஒரே மோதல் சமணமதத்தோடு மட்டும்தான், மோதல் மிக மூர்க்கமாகத்தான் இருந்திருக்கின்றது.
அந்த காலகட்டத்தில் சமண துறவிகள் எல்லாம் கழுவேற்றபட்டனர், ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடிக்கபட்டு கொல்லபட்டனர், காரணம் என்றால் அந்த தமிழெழுத்தில் புள்ளி இல்லை, இவர் தமிழ் சரி இல்லை, இந்த சமணதுறவி கொல்லபடவேண்டியவர் என்று கதைவசனம் எழுதிய காலமும் இருந்தது.
மதுரை அதற்கு முதலிடம், மதுரையை விடுங்கள். வள்ளியூரிலும் அப்படி ஒரு நிகழ்வுகள் நிகழ்ந்ததாக குறிப்புகள் உண்டு என்பார்கள்.
இப்படியாக சமணமதம் ஒழியஆரம்பித்தது, இன்னொன்று அது பின்பற்றுவதற்கு சற்று சிரமான மதமும் கூட, “மயில்றகால் வழியை துடைத்துகொண்டே நடக்கவேண்டும் காரணம் நீ ஏதாவது ஒரு எறும்பினை மிதித்துவிடலாம் அல்லவா?” என்றால் எவ்வளவு சிரமம்?. அப்படித்தான் அது தமிழகத்தில் வழக்கொழிந்த்தது
பின்னாளில் வடஇந்தியர்கள் வியாபாரவிஷயமாக தென்னிந்தியாவிற்குள் நுழைய அவர்களோடு சமணமும் நுழைந்து சில இடங்களை, குறிப்பாக சென்னையில் அடையாளாமிட்டுகொண்டது. அம்மதம் ஒருகாலத்தில் தமிழகத்தை ஆண்டது என்றால் அதனை அவர்களே நம்பமாட்டார்கள்.
வாக்கு அளிக்கும் உரிமை இருந்தால் செம்மறிஆட்டு கூட்டத்தையும் குறிவைக்கும் தமிழக அரசியல் உலகில், அவர்களின் வோட்டிற்காக மகாவீரர் நினைவுகூறபடுகின்றார். சென்னையில் சில ஏரியாக்களே உண்டு.
மற்றபடி அவரும் அவரது மதமும் தமிழகத்திற்கு செய்த சேவைக்காக அல்லவே அல்ல.
மகாவீரர் தமிழரில்லை ஆனால் அவரது சமயதுறவிகள் தமிழை படித்துதான் இறவா காவியங்களை நமக்கு தந்தனர், நிச்சயமாக சொல்லலாம் தமிழகத்தின் முதல் பள்ளிகள் அவர்களால்தான் தொடங்கபட்டன.
மிக உன்னதமான போதனைகளுக்கும் கொள்கைகளுக்கும் வணங்கபடவேண்டியவர் மகாவீரர், அதற்கும் மேலே தமிகத்திற்கு பல கொடைகளை அருளியது அவர் நிறுவிய அமைப்பு என்பதால் நிச்சயம் தமிழ் அறிந்த, தமிழகம் அறிந்த தமிழர்களால் நன்றியோடு நினைவுகூறவேண்டியவர்.
வள்ளுவரின் குறளில் சமண தாக்கமும் உண்டு, அதைபற்றி கிளரவேண்டாம். அவர் கிறிஸ்துவர் தெரியுமா? என வள்ளுவனின் தாடியை பிடித்து இங்கு இழுத்து வந்துவிடுவார்கள். பல வகையான நம்பிக்கைகளை உடைய விசித்திர உலகமிது.
செல்லம் எனும் தமிழ்சொல் ஷாலோம் அல்லது சாலோம் எனும் இஸ்ரேலிய ஹீப்ருமொழியிலிருந்து வந்தது என்பது வரை பல அறிவாளிகள் அலையும் உலகிது, திருக்குறளை அவர்கள் படுத்தும்பாடு கொஞ்சமல்ல. அவர்கள் ஆராய்சி தொடரவாழ்த்துக்கள் அவ்வளவுதான் சொல்லமுடியும்.
ஆனால் நாம் சொல்லவருவது என்னவென்றால் வள்ளுவனின் அறத்துபாலில் மகாவீரரின் சிந்தனையின் சில தூறல்கள் நிச்சயம் உண்டு. வள்ளுவன் அவரை மனதார ரசித்திருக்கலாம்.
இருவருமே மதுபழக்கத்தின் கொடுமையை உலகுறைக்க சொன்னவர்கள், அப்படி சமண முனிவர்களின் போதனையும், வள்ளுவனின் 20 வரியும் சுற்றி சுற்றிவந்த தமிழகம்தான் இன்று “ஒப்பன் த டாஸ்மாக்” என சீர்கெட்டு நிற்கின்றது.
நாளை மகாவீரரின் பிறந்தநாள்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் தழைத்து நின்று பின் பட்டுவிட்ட பெரும் மரமாக அவரின் மரத்தை கருதினாலும், அது விட்டுசென்ற சுவடுகளும், அது கொடுத்த கனிகளும் ஒரு காலத்திலும் தமிழனால் மறுக்கமுடியாதவை
இப்பொழுது தமிழன் அக்கால சமண எதிர்ப்பு,பிற்கால பிராமண எதிர்ப்பு வரிசையில் புதிதாக ஒன்றையும் இணைத்துவிட்டான் அதன்பெயர் வடுகவந்தேறிகள்.
அந்தவடுக வந்தேறிகள் என இவர்கள் தூற்றதொடங்கினாலும், கல்லணை தவிர பெரும்பாலான ஏரிகளும்,குளங்களும் அந்த வந்தேறிகள் கட்டியது என்பதை மறந்துவிடுகின்றார்கள். அந்த வந்தேறிகள் உருவாக்கிய வயல்கள்தான் இன்று இவர்களுக்கு சோறுபோடுகின்றது என்பதைஎல்லாம் உணர்வதில்லை.
அந்த வந்தேறிகள் மதுரை வந்து காவல் இருந்திராவிட்டால் இன்று இங்கும் ஒரு காஷ்மீர் உருவாகி இருக்கும் என்பதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள்.
இருக்கட்டும், அவர்கள் அப்படியே இருக்கட்டும்.
நாம் நன்றியுள்ள தமிழர்கள், சமணர்களின் பெருநாள் அன்றும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
அதேநேரம் கழுவேற்றபட்டு கொல்லபட்ட சமணதுறவிகளையும் கண்ணீரை துடைத்துவிட்டு நினைத்துகொள்ளலாம்,
வள்ளியூரில் எப்பக்கம் கழுவேற்றபட்டார்கள் என சரியாக தெரியவில்லை ஆனால் நடந்திருக்கின்றது. அந்தஊரின் எல்லா தெருக்களையும் சுற்றியவர்கள்
நிச்சயம் அந்த அப்பாவிகளின் ரத்தம் கலந்த மண்ணையும் நம்மை அறியாமல் மிதித்திருக்கின்றோம் எனும்பொழுது மனம் கனக்கத்தான் செய்கின்றது.
கைகூப்பி கண்ணீரோடு வணங்க வேண்டியவர்கள் அந்த துறவிகள், காரணம் அவர்கள்தான் முதல் “பள்ளி” ஆசிரியர்கள். அதற்கு மூலகாரணம் மகா அல்லது மெகாவீரர் அந்த வர்த்தமானர்.