தமிழகம் தேசிய நதியில் கலந்து இந்தியா முழுக்க ஜொலிக்கட்டும்

தமிழகத்திலும் தேச அபிமானிகள் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் உண்டு, ஆனால் இங்கே நேரு முதல் பலர் பிரபலம் வட இந்தியாவில் அப்படியா?

காமராஜரை ஏற்றார்களா, ராஜாஜியினை ஏற்றார்களா என ஏகபட்ட கேள்விகள், அதாவது வடக்கத்தியர் தமிழரை புறக்கணிக்கின்றனர் என வாதம் வைக்கின்றார்கள்

ஒரு விஷயம் புரிய மறுக்கின்றார்கள்

தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் விவேகானந்தரோ இல்லை வேறு அடையாளமோ இந்தியா முழுக்க அறியபடவும் அவர்கள் பெயர் நிலைக்கவும் பலர் அந்தந்த மாநிலத்தில் இருந்து உழைத்தனர்

தமிழகத்தில் காந்தி மண்டபம் நிறுவபடவும், விவேகானந்தர் பாறை அமைக்கபட்டதும் இன்னும் பலவும் அப்படித்தான்

இங்கே உள்ள தமிழர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் தமிழகம் தாண்டி பரவ என்ன செய்தார்கள்?

ஒரு மண்ணுமில்லை

திராவிடம், தென்னகம் ஆரிய எதிரி, வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றது என இல்லா கோஷங்களை எழுப்பி தமிழகம் இந்திய தேசியத்துடன் இணையாமல் பார்த்து கொண்டார்கள்

காமராஜரை அகில இந்திய அளவில் கொண்டு சேர்த்திருக்க வேண்டியது தமிழக காங்கிரசார் வேலை, செய்தார்களா?

சத்தியமூர்த்திபவனில் கபடி ஆடவே அவர்களுக்கு நேரமில்லை

பின் திமுக அதிமுகவா செய்யும்?

அவர்களுக்கு இங்கு அண்ணா, ராமசந்திரன், ஜெயா என ஒப்பாரி வைக்கவே நேரமில்லை பின் அகில இந்திய அளவில் எப்படி?

இங்கு காமராஜர், ராஜாஜிக்கு அடுத்து தேசிய அடையாளங்கள் எழும்பாதவாறு திராவிடம் அரசியல் கவனித்துகொண்டது

தமிழகம் எனும் குறுகிய மனப்பான்மையில் இங்கு மக்கள் சிக்கிவிட்டனர்

விவேகானந்தர் பாறை அமைக்க அந்த ஏக்நாத் என்பவர் பட்ட பாட்டில் நூற்றில் ஒருபங்கு உழைத்தாலும் வடக்கே காமராஜர், ராஜாஜி பெயர் நின்றிருக்கும்

செய்தார்களா?

இங்கு அண்ணா, கலைஞர், ஜெயா, புர்ச்சி தலைவன் என திரிவார்கள், வடக்கத்தியன் வந்து இவர்கள் பெயரையா இந்தியா முழுக்க பரப்புவான்?

நடக்குமா?

ஆனாலும் இந்நாட்டிற்கு உழைத்தவர்களை இத்தேசம் கைவிடவில்லை

கலாம் எனும் தமிழர் பெயரில் வட இந்தியாவில் ஏராளமான கல்லூரிகளும், பல்கலை கழகங்களும் அமைந்திருக்கின்றன‌

ஆம் இந்தியனாக வாழ்ந்தால் இத்தேசம் தமிழனை கைவிடாது, அவனுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்தே தீரும்

ஆனால் நான் திராவிடன் தமிழன் இனமானம் மிக்கோன் என சொல்லிகொண்டிருந்தால் யார் அவர்களை இந்தியராக நோக்குவார்கள்?

சொந்த நாட்டு ராணுவத்துடன் புலிகள் எனும் தீவிரவாத இயக்கம் மோதி அவர்களின் சவபெட்டியினை அனுப்பும் பொழுதே அந்த புலிகளுக்கு மதுரையில் சிகிச்சை அளித்த தமிழகம் இது, எந்த இந்தியன் தாங்குவான்?

பாகிஸ்தான் எல்லையில் தமிழக வீரன் சாக, அவனை சுட்ட பாகிஸ்தான் தீவிரவாதிக்கு பஞ்சாபில் பாதுகாப்பு என்றால் நாம் பொறுப்போமா?

இங்கு அதுதான் நடந்தது

எவனாவது சொந்த நாட்டு ராணுவத்தை பழிப்பானா? இங்கு பழித்தார்கள்

எவனாவது சொந்த நாட்டு பிரதமரை கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதிக்கு கொடி பிடிப்பார்களா?

இங்கு பிடித்தார்கள்

பின் எங்கிருந்து இவர்களை இந்தியராக நோக்குவார்கள்? வெறுப்பு வராதா

இங்கு வளர்த்ததெல்லாம் வெறுப்பு அரசியல் , வெறுப்பூட்டும் அரசியல் பின் விளைவுகள் எப்படி இருக்கும்

இதில் எங்களை ஏற்றுகொள்ளவில்லை என வருத்தம் வேறு, உங்களை கொல்லாமல் விட்டதே பெரும் விஷயம்

தவறினை நம்மேல் வைத்து கொண்டு ஏய் வடக்கத்திய ஆர்ய பார்ப்பன கும்பலே என வசனம் பேசுவது அறிவுடமை ஆகாது

தேசிய உணர்வில் வளர்ந்து உழைத்தவர்கள் யாராயினும் இத்தேசத்தில் கொண்டாடபட்டே இருப்பார்கள் கலாம் போல என்பது உறுதி, நிச்சயம் உறுதி

இனியாவது தமிழகம் தேசிய நதியில் கலந்து தமிழக அடையாளங்கள் கலாம் போல இந்தியா முழுக்க ஜொலிக்கட்டும்