தமிழகம் மிக மோசமான இருண்ட காலத்தில் சிக்கி இருக்கின்றது

நிர்மலா தேவி விவகாரம் என்றவுடன் ஓடி வந்து தானே விசாரணை கமிஷன் அமைத்து அதன் அறிக்கையினை தானே வாங்கி மறைத்த கவர்னர் தாத்தாவிற்கு தூத்துகுடி சம்பவம் பற்றி ஒன்றும் சொல்ல தெரியவில்லை

கோவை ஜக்கி சாமியார் ஆசிரமத்திற்கு ஓடி வந்த மோடியினை தூத்துகுடி விவகாரத்தில் காணவே இல்லை

முதல்வர் என்பவரை பற்றி சொல்லவே வேண்டாம், ஜீன்ஸ் படத்து கோழை நாசர் போல சமாளித்துகொண்டிருக்கின்றார்

ஒரே நேரத்தில் கவர்னர், முதல்வர், பிரதமர் எல்லாம் மிக மோசமான நபர்களாக வாய்த்து விட்டது தமிழகத்தின் இருண்ட காலம்

தமிழகம் மிக மோசமான இருண்ட காலத்தில் சிக்கி இருக்கின்றது


ராம சந்திரன் “புரட்சி தலைவன்”, ஜெயா “புரட்சி தலைவி”, சசிகலா “தியாக தலைவி”, தினகரன் திராவிட செல்வன்”

அவ்வகையில் காடுவெட்டி குரு “சமூக நீதிகாத்த மாவீரன்”

இதில் என்ன அதிசயம் இருக்கின்றது, தமிழகம் இப்படித்தான்


தினகரனை சந்தித்தார் வைகோ : செய்தி

ஒரு ஸ்லீப்பர் செல், தன் தலைவனை சந்திப்பதில் என்ன மர்மம் இருக்க முடியும், அனுப்பியவரிடம் அவ்வப்போது ரிப்போர்ட் கொடுக்காவிட்டால் என்ன வேலைக்காரன்?


ஜெயா எழுதிய உணவு குறிப்பு வெளியானது : செய்தி

அந்த குறிப்பில் என்ன இருந்தது என பார்த்தால், அந்த அம்மாவின் எடையான‌ 106 கிலோவிற்கான காரணம் இருந்தது.

போயஸ்கார்டனில் ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டே இருந்திருக்கும் போல..


 

நாளை தூத்துகுடி செல்கின்றார் பன்னீர்

அந்த ஸ்டெர்லைட் ஆலை முன்னால் ஜெயா சமாதியில் இருந்தது போல தியானத்தில் இருந்து போராடட்டும் பார்க்கலாம்

அவரா செய்வார்?

ஆட்சிக்காக செய்தால் அது தர்ம யுத்தம், நாளை தூத்துகுடியில் அவர் செய்ய போவது கர்ம யுத்தம்