“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

“தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என்றால் சுடுகாடு தான் ” : ரஜினி

ஆவடி முதல் கன்னியாகுமரி வரை ஏகபட்ட தொழிற்சாலை நிரம்பிய தமிழகம் இது, திருச்சி பெல் தொழிற்ச்சாலை எல்லாம் பெரும் பிரமாண்டம்

எல்லா ஆலையிலுமா போராட்டம் நடக்கின்றது? தூத்துகுடியில் ஸ்பிக் முதல் இன்னும் ஏகபட்ட விஷயம் உண்டு, அதெற்கெல்லாமா போராட்டம் உண்டு?

நெல்லை சிமென்ட் தொழிற்ச்சாலை பிரமாண்டம் என்ன? ஒரு குரல் கேட்டிருக்கும்?

எது எல்லாம் ஓரளவு பாதுகாப்பான தொழிற்சாலையோ அங்கெல்லாம் மக்கள் நலன் காக்கபடுமோ அங்கெல்லாம் ஒரு எதிர்ப்புமில்லை

மாறாக அபாய ஸ்டெர்லைட், உறங்கும் எரிமலையான அணுவுலை, கடற்கரை மக்களை கொன்ற தாதுமணல் (இது பெரும்பாலும் வராது) இதுபோன்ற கொடிய தொழிற்சாலைகளைத்தான் எதிர்க்கின்றார்கள்

தொழிற்சாலை வேண்டாம் என எந்த தமிழனும் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது

உயிர்கொல்லும் ஆலைகள் வேண்டாம் என்பதே நிலைப்ப்பாடு

அது தெரியாமல் ரஜினி என்னவோ பேசிகொண்டிருந்தால், இவர் அரசியலுக்கு வந்தால்தான் நாடு சுடுகாடாகும்