தமிழக அரசின் இலங்கை தமிழருக்கான கோரிக்கைக்கு மிக சரியான பதிலை தெரிவித்திருக்கின்றார்
தமிழக அரசின் இலங்கை தமிழருக்கான கோரிக்கைக்கு மிக சரியான பதிலை தெரிவித்திருக்கின்றார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
“நாம் இலங்கையில் எதையும் தனித்து செய்துவிட முடியாது, இலங்கை அரசுக்குட்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு மூலமாகத்தான் உதவ முடியும்
நீங்கள் எங்களிடம் பொருட்களை ஒப்படையுங்கள் அதை இலங்கைக்கான இந்திய தூதர் இலங்கை அரசிடம் ஒப்ப்டைப்பார் அவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு விநியோகிப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் தயக்கமின்றி எங்களை தொடர்பு கொள்ளலாம்”
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மிகபெரிய பதவியில் இருப்பதால் இவ்வளவுதான் அதிகாரபூர்வமாக சொல்லமுடியும், ஆனால் அவர் சொல்லாமல் விட்ட வரிகள் இதுவாக இருக்கலாம்
“இதற்கு மேல் நீங்கள் இலங்கை தமிழருக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் தனியாக கப்பலில் அல்லது படகில் அனுப்பலாம் ஆனால் அதனை இலங்கை கடற்படை வழிமறித்து எடுத்துகொள்ளும்
அதை மீறி ரகசியமாக அனுப்ப விரும்பினால் உங்கள் கூட்டணி எம்பி வைகோப்பால்சாமியினை தொடர்பு கொள்ளலாம் காரணம் திருட்டு தோணி வழியாக விசா இன்றி முன்பு இலங்கைக்கு சென்ற அனுபவம் அவருக்குத்தான் உண்டு
இதை தவிர அங்கிள் சைமன் என்பவரிடம் ஆலோசனை கேளுங்கள் அவர் 60 ஆயிரம் டன் அரிசி கப்பலை அனுப்ப்பும் வியூகம் தெரிந்தவர்”
ஆக இந்த விவகாரத்தில் முக ஸ்டாலின் அவசரபட்டு வழக்கம் போல் சிக்கி கொண்டார் என்றே தோன்றுகின்றது
ஒருவேளை இலங்கை தமிழருக்கான உதவியினை இலங்கை அரசு பெற்றுகொண்டாலும் முக ஸ்டாலின் யாரிடம் கொடுக்க வேண்டும் தெரியுமா?
“தமிழின விரோதி” “தமிழின படுகொலையாளி” மகிந்த ராஜபக்சே கையில்தான் கொடுக்க வேண்டும்
அதாவது 2009ல் தமிழர்களை மொத்தமாக கொன்ற ராஜபக்சேவிடம் தமிழக தமிழ் தலைவர் தமிழ் மக்களை காக்க உதவி வழங்குவார் என்பது மிகபெரிய காமெடியாக பார்க்கபடும்
அண்ணாமலையினை தொடர்ந்து தமிழக முதல்வரும் இலங்கை சென்றால் அங்கிருக்கும் புலி ஆதரவாளர்களும் இன்னும் பலரும் 2009ல் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் திமுக நடத்திய நாடகங்களுக்காக கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்
ஏன் ஸ்டாலினாருக்கு இலங்கையில் கருப்பு கொடி கூட காட்டபடலாம்.
ஆக ஸ்டாலினார் வீசிய பந்தை “சிக்ஸருக்கு” அல்ல, மைதானத்தை தாண்டி ஏன் கடல் தாண்டி அடித்துவிட்டார் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
உண்மை… உண்மை… உண்மை.. கலவரம் செய்வதற்கு என்றே போவார்கள். அருமையான பதில் கொடுத்து உள்ளார் ஜெய் சங்கர் ஜி… உதய நிதி அனுப்பலாமே?