தமிழக அரசியல் குழப்பங்களை மாற்ற போகின்றோம்..

Image may contain: 1 person, smiling, close-up
தமிழக அரசியல் குழப்பங்களை மாற்ற போகின்றோம்..
தமிழகத்தை முன்னேற்ற போகின்றோம்..

என்ன கட்சியோ தெரியவில்லை, ஊழல் செய்தார்கள் என அவர்கள் மேலிடத்தை சுப்ரீம் கோர்ட் ஜெயிலுக்கு அனுப்பியது, அவர்கள் சிக்காத வழக்கு இல்லை, அவர்கள் மேல் பாயாத வருமானவரி குற்றசாட்டு இல்லை

கண்டெய்னர் கணக்கில் சிக்கிய பணங்களும் அவர்கள் ஆட்சியில் தான் நடந்தது

அப்பல்லோவில் அவர்கள் அள்ளிவிட்ட கணக்கு தெரியவில்லை

தேர்தலுக்கு பணம் கொடுத்தார்கள் என சில தொகுதிகளில் தேர்தலே நின்றது, இந்தியாவிற்கே அது புதிது. மொத்த இந்தியாவும் அரண்டது

இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த சர்ச்சையில் துணை பொதுசெயலாளரே உள்ளே சென்றார்

இப்பொழுது எம்.எல்.ஏவினை விலைக்கு வாங்க முயன்றார்கள் என அடுத்த வில்லங்கம்

அவ்வளவு பணமா கொட்டி கிடக்கின்றது? எப்படி வந்தது?

அட குவிந்த பணத்தை இலங்கைக்கு கொடுத்து கச்சதீவினை வாங்கினார்களா? இல்லை கன்னட அரசுக்கு கொடுத்து காவேரி வாங்கினார்களா? அப்படி செய்தால் கூட மன்னித்துவிடலாம்

இவர்கள் அப்படியும் செய்யவில்லை இவர்களுக்குள்ளே பங்கு வைத்து விளையாடுகின்றார்கள்.

இவ்வளவு சிக்கலும் குற்றசாட்டும் சர்ச்சையும் உள்ள கட்சி ஒரு ஜனநாயக நாட்டில் ஏன் நீட்டிக்க வேண்டும்? தடை செய்தால் என்ன?

அதனைத்தான் செய்ய வேண்டும்,

ஒரு கொள்கையும் ஒரு கோட்பாடும் ஒரு மக்கள் நலனும் இல்லா கட்சி, வெறும் பணத்தை கொண்டு ஆளலாம் என கிளம்பும்பொழுது அதனை அனுமதிப்பது எப்படி? அதுவும் ஆயிர குற்றசாட்டுகளோடு அது இருக்கும்பொழுது எப்படி அனுமதிக்கலாம்

பொது செயலாளர் பெங்களூர் சிறையில், துணை பொதுசெயலாளர் திகார் ஜெயிலில் என எங்காவது ஒரு விசித்திர காட்சியினை காண முடியுமா? இந்த அவமானத்தில் அவர்களே கட்சியினை கலைத்திருக்க வேண்டும்

மானமுள்ளவர்கள் என்றால் செய்திருக்கலாம், அது இல்லை என்பதால் இனி தேர்தல் கமிஷன் தான் தன் கடமையினை செய்ய வேண்டும்

அதற்கு முன்னால் அவர்களிடமுள்ள மொத்த பணத்தையும் பிடுங்கி தமிழக அரசின் 4 லட்சம் கோடி கடனை அடைக்கலாம்

இந்த கட்சிக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால், இப்படியே விட்டால் நாளை மத்திய அரசை விலைக்கு வாங்குவார்கள், அடுத்து அமெரிக்காவினை வாங்குவார்கள், தமிழன் உலகை வாங்கிவிட்டான் என பாரதிராஜா கைதட்டிகொண்டிருப்பார்

உடனடியாக இந்த பணத்தை வீசி அரசியல் செய்யும் அதிமுகவிற்கு இந்திய ஜனநாயக தேர்தல் கமிஷன் ஒரு முடிவினை கட்டியாகவேண்டும், இல்லாவிட்டால் தேர்தல் கமிஷனுக்கே விலை குறிப்பார்கள்..


வீடியோவில் இருப்பது நான் தான், ஆனால் குரல் என்னுடைய கிடையாது: எம்.எல்.ஏ சரவணன்

அந்த குரல் இவரோடது இல்லையா? இல்லை இவர் எம்.எல்.ஏ சரவணனே இல்லையா என்பது பற்றி யார் விசாரிக்க போகின்றார்கள்

குரல் இவருடையது அல்ல, ஆனால் இவர் தான் சரவணன் சமஉ என நம்பி தொலைப்போம்