தமிழக அரசில் என்ன நடக்கின்றது?
இந்த போலி பாஸ்டர்கள் உடலில் முதலில் டெங்கு கிருமியினை ஏற்றிவிட வேண்டும்
ஒரு சொட்டு மருந்தும் கொடுக்காமல் அடைத்துவைத்து முதலில் பரிசோதித்துவிட்டு உயிரோடு இருந்தால் இவர்களின் விஷேச ஜெபத்திற்கு அனுமதிக்கலாம்
பூரா பயலுக்கும் இயேசுநாதர் என்றே நினைப்பு
மாநிலத்தில் செய்யவேண்டிய காரியம் ஏகபட்டது இருக்கின்றது, டெங்கும் பன்றிகாய்ச்சலும் போட்டு சாத்துகின்றன
தீபாவளி நெருங்கும் நிலையில் , மழையும் மிரட்டும் நிலையில் அரசுக்கு செய்யவேண்டிய காரியம் ஏராளம் உண்டு
லாரி ஸ்ட்ரைக் என்றொரு போராட்டத்தில் இயல்புவாழ்க்கை முடங்கியிருக்கின்றது
ஆனால் தமிழக அரசில் என்ன நடக்கின்றது?
யார் எல்லாம் ஸ்லீப்பர் செல் என கணக்கெடுக்கின்றார்களாம், ஒரு அமைச்சர் எசமான் நான் ஸ்லீப்பர் செல் இல்லீங்க, உங்க அடிமை என பழைய பாலையா பாணியில் அழுகின்றார்.
அக்கால சிஐடி சகுந்தலா ஸ்டைலில் சி.ஆர் சரஸ்வதி சிக்கின்றார்
ஆட்சி செய்கின்றார்களா என உற்றுபார்த்தால், நம்பியார், அசோகன் போன்ற பழைய வில்லன்களின் சாயலில் என்னவோ செய்கின்றார்கள்
ராமசந்திரனின் கட்சியின் ஆட்சியில் இப்படி நம்பியார், அசோகன் , உளவாளிகள், ஸ்லீப்பர் செல் என இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
நாடக கட்சியில் இதெல்லாம் சகஜம்