தமிழக ஆளுநர் போல் சிலையாக நிற்கின்றார் வடகொரிய அதிபர்
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய புலி ஒன்று இப்பொழுது அடங்குகின்றது
ராக்கெட்டும் அணுகுண்டுமாக வடகொரியா செய்த அட்டகாசம் ஏராளம், கடும் அழிச்சாட்டியம் எல்லாம் செய்தது அந்நாடு
இப்பொழுது இந்த சி.ஐ.ஏ தலைவர் சென்று வந்ததில் இருந்து அவரின் சுருதி குறைந்துவிட்டது
முன்னதாக தென்கொரியாவில் ஜப்பானில் இருக்கும் அமெரிக்க முகாம்கள் அகற்றபடும் வரை அணுசக்தியினை கைவிடும் பேச்சிக்கே இடமில்லை என சொல்லிகொண்டிருந்தார்
அவர் குறிப்பிட்டது கிட்டதட்ட 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் கொண்ட் பெரும் முகாம். அமெரிக்காவிற்கு அப்படி உலகெல்லாம் முகாம் உண்டு. வல்லரசு என்றால் அப்படித்தான்
இப்பொழுது நிபந்தனை எல்லாம் இல்லை, அமெரிக்க முகாம் எங்கும் இருக்கட்டும் என்ற லெவலுக்கு இறங்கிவிட்டார் வடகொரிய அதிபர்
இப்பொழுது டிரம்ப் எகிறுகின்றார், நான் வடகொரிய அதிபருடன் பேசுவேன், அவர் தாறுமாறாக பேசினால் பேச்சுவார்த்தையினை முறிப்பேன் என மிரட்டுகின்றார்
வடகொரிய தரப்பில் இதற்கு கனத்த அமைதி
சிஐஏ தலைவர் எதனையோ காட்டிவிட்டு வந்திருக்கின்றார், அதிலிருந்து தமிழக ஆளுநர் போல் சிலையாக நிற்கின்றார் வடகொரிய அதிபர்