தமிழக ஊடகங்களிலும் டிவிக்களிலும் ஒரு விஷயத்தை நீங்கள் அவதானிக்கலாம் அது கேரளாவில் ….
தமிழக ஊடகங்களிலும் டிவிக்களிலும் ஒரு விஷயத்தை நீங்கள் அவதானிக்கலாம் அது கேரளாவில் நடந்த அந்த இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே பெரும் அதிர்ச்சியினை அது ஏற்படுத்தியுள்ளது அந்த சம்பவம், இப்படியும் காட்டுமிராண்டிதனம் உண்டா அதுவும் கல்வி அறிவு மிகுந்ததாக நம்பபட்ம் கேரளாவில் உண்டா என்பதுதான் அதிர்ச்சியிலும் பெரும் அதிர்ச்சி
இந்த சம்பவத்தின் தொடக்கம் லாட்டரி விற்பானியில் தொடங்குகின்றது, லாட்டரி விற்கும் தொழிலை எர்ணாகுளம் பக்கம் செய்தவர் ரஷீத் எனும் முகமது ஷபி
இவருக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த்த பாரம்பரிய மருத்துவர் மனைவி லைலாவுக்கும் சில உறவுகள் இருந்திருக்கின்றன, லைலாவுக்கு பல பிரச்சினைகளும் பண தேவையும் இருந்திருக்கின்றது
இதனால் மிக கொடிய மூடநம்பிக்கையான நரபலி கொடுக்க திட்டமிட்டிருக்கின்றார்கள்
அவ்வகையில் ரஷீத்துக்கு தெரிந்த தமிழக தர்மபுரியினை சேர்ந்தவரும் எர்ணாகுளத்தில் லாட்டரி விற்றவர்களுமான பத்மா எனும் ஐம்பது வயது பெண்ணையும், கேரளா காலடியினை சேர்ந்த ரோஸ்லின் எனும் பெண்ணையும் காட்டுக்கு அழைத்து சென்று நரபலி கொடுத்திருக்கின்றார்கள்
இதுவே கொடுமை என்றால் அதன்பின் நடந்தது மானுடமே தலைகவிழும் கொடுமை
ஆம், நரபலி கொடுத்தபின் அந்த பெண்களின் உடலை சமைத்து உண்டிருக்கின்றார்கள் அந்த கொடியவர்கள் அப்பொழுதுதான் முழு பலன் கிடைக்குமாம்
காணமல் போன பெண்களின் மகள்கள் கொடுத்த தகவல்பேரில் விசாரணை தொடங்கபட்டது
இப்பொழுது அந்த ரஷீத், லைலா உள்ளிட்ட மூன்றுபேரை காவல்துறை கைதுசெய்து விசாரித்ததில் இந்த தகவல் வெளிவந்திருக்கின்றது, இன்னும் அதிர்ச்சி தகவல் வரலாம்
ஏன் தமிழக மீடியாக்கள் வாயே திறக்கவில்லை?
ஒரே காரணம் அதில் சிக்கியிருப்பவன் பெயர் ரஷீத் எனும் இஸ்லாமிய பெயர்
இந்த கொடூர யோசனையினை சொன்னவன் பெயர் ஷிகாப் அவன் ஒரு போலிசாமியார்
இதுவே சுப்புசாமி, பரமசிவ பட்டன், பட்டாச்சார்யா என இந்து பெயர்கள் வந்திருந்தால் இந்துமத கொடுமை பாரீர் என ஆளாளுக்கு எப்படியெல்லாம் பொங்கியிருப்பார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை
உலகை உலுக்கும் இந்த விவகாரத்தை தமிழகத்தில் எந்த ஊடகமும் பேசவில்லை, பேசவும் பேசாது என்பதுதான் வலிநிறைந்த உண்மை