பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக தலித்துகளுக்கு தேவை பெரியாரா அம்பேத்கரா?

தமிழக தலித்துகளுக்கு தேவை பெரியாரா அம்பேத்கரா என்றொரு பட்டிமன்றம் ஓடிகொண்டிருக்கின்றது.

இதில் சுத்த‌ அரசியல் நோக்கம் என்பதை தவிர ஒரு விஷயமுமில்லை

தமிழகத்தில் பெரியாருக்கு இருக்கும் இடத்தை அம்பேத்கரை கொண்டு அடித்து நொறுக்குவதை தவிர வேறு திட்டமில்லாத வாதங்கள் இவை

அம்பேத்கரின் போராட்டம் வேறுமாதிரியானது, கல்வி சமுதாயத்தை உயர்த்தும் என்றார், அவர் படித்தார் வந்தார் சட்டங்களை இயற்றினார், அத்தோடு சரி

அவரின் போராட்டம் பெரும் அரசியல் இயக்கமாக மாறவில்லை, இன்றளவும் வடக்கே தலித் கட்சிகள் வலுவாக இல்லை, இருந்திருந்தால் இந்த அளவு பாஜக வளர்ந்திருக்காது

புத்தமதம் என்றார், இன்னும் பல விஷயங்களை சொன்னாரே தவிர சாதியின் ஆணிவேரை தொட அவருக்கு தயக்கம் இருந்தது ஆனால் சட்டபடி எதனை செய்ய வேண்டுமோ அதனை தனிமனிதனாக செய்தார்

பெரியார் துணிந்தார், அம்பேத்கர் பல விஷயங்களை துணிச்சலாக பேச பெரியார் வழிகாட்டியாய் இருந்தார்

ஒரு தலைவன் என்ன விட்டுவிட்டு சென்றானோ அதுதான் அவனின் வெற்றி

அவ்வகையில் அம்பேத்கரின் அரசியல் அவருக்கு பின் இல்லை, மஹராஷ்டிராவிலோ இல்லை உபி மபி பக்கமோ அவருக்கான இயக்கம் வலுவாக இல்லை

வந்த மாயாவதி கோஷ்டிகளும் பெரும் பழியோடு ஓடிவிட்டனர்

உண்மையில் பெரியாரின் இயக்கம் இங்கே வேர்விட்டது, இன்றுவரை மகா உறுதியாய் இரும்பு கோட்டையாய் இருக்கின்றது

இதில் யார் சாதித்தவர்கள் என்றால் அம்பேத்கரை விட பெரியார் சிலபடி மேல், அம்பேத்கார் அதிகம் சொல்லாத பெண்விடுதலை கூட துணிச்சலாக பேசினார் பெரியார்

அப்படிபட்ட பெரியாரின் சிந்தனையில் தமிழகம் ஓரளவு பாதுகாப்பாக இருக்க, இங்கு அம்பேத்கர் தேவை , ஜெய் பீம் என்பதெல்லாம் வீணாக குழப்பம் விளைவிக்கும் செயல்

அம்பேத்கர் சொன்ன எல்லா விஷயங்களையும் அவருக்கு முன்பே இங்கு பேசியவர் பெரியார், அம்பேத்கர் உருவாக்க தவறிய சமுதாய புரட்சியினையும் இங்கு நடத்திகாட்டியவர் பெரியார்

ஜெய் பீம் என்பதை மகராஷ்டிராவில் சொல்ல முடியாது, உபி பக்கம் அதிகம் முடியாது, சுருக்கமாக சொன்னால் தமிழகத்தை தவிர எங்கும் சுதந்திரமாக சொல்லமுடியாது

பெரியாரின் தமிழகத்தில் அதை சுதந்திரமாக சொல்லமுடிகின்றது என்றால் அதுதான் அம்பேத்கரின் தோல்வி , பெரியாரின் வெற்றி

பெரியார் இருக்க இங்கு ஜெய் பீம் என கிளம்புவது கனி இருப்ப காய்கவர்ந்தற்று என்பது போல…

ஒருவேளை தனி தலித்நாடு அடைந்தால் கூட அணுகுண்டா செய்ய முடியும்?

வடகொரிய அதிபரே சாட்சி

“. நீ அணுகுண்டு செய்தால் நானும் செய்வேண்டா, நீ 10 செஞ்சா நான் 50 செய்வேண்டா”

“நீ போடுற பொருளாதர தடை வேன்டாம்னு உன் கால்ல விழுந்துட்டு, நீ சொல்ற ஒப்பந்தத்தை போட்டுட்டு, நீ சொல்றபடி வாழனுமாடா..” என்றெல்லாம் சீற முடியாது

சமுதாயம் முன்னேற கல்வியும் சிந்தனையும் எல்லாவற்றையும் விட சகலருடன் நட்புறவும் தேவை

இது எல்லா சாதிக்கும் பொருந்தும்.

அம்பேத்கர் எல்லோரையும் படிக்க சொன்னார், பெரியார் சிந்திக்க சொன்னார், அவ்வளவுதான் விஷயம்

அதை தலித்தியம் பேசுவொர் ஒழுங்காக செய்தாலே ஒரு குழப்பமும் வராது

 
 
 
Comments
 
 
 
 
 
 
 
 
 
Chat (47)

 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications