தமிழக துப்பாக்கி சூடு வரலாறு

Image may contain: 1 person, standing, hat and text

துப்பாக்கி சூடு கலாச்சாரம் வெள்ளையனுக்கு பின் இங்கு பக்தவச்சலம் காலத்தில் வந்தது, திமுகவின் வீரம் செறிந்த போராட்டத்தை ஒடுக்க பக்தவச்சலம் துணை ராணுவபடையினை வரவழைத்தார்

கிட்டதட்ட 64 பேர் செத்தார்கள், தமிழகம் கண்ட மாபெரும் துப்பாக்கி சூடு அது. ஆனால் அதுதான் இங்கு இந்தியினை விரட்டியது. சந்தேகமில்லாமல் ஆட்சியினை மாற்ற திமுகவிற்கு உந்து சக்தி ஆனது. மக்கள் மனதில் திமுக இடம்பெற்றது அதில்தான்

அதன் பின் கலைஞர் ஆட்சியில் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை, பொதுவாக எப்பிரச்சினை ஆனாலும் அவர் அலசி ஆராய்வார். துப்பாக்கி சூடு அவர் ஆட்சியில் இல்லை

இந்த கொடும் துப்பாக்கி சூடு எப்பொழுது வந்ததென்றால், பக்தவத்சலம் காலத்திற்கு பின் யார் கொண்டுவந்தாரென்றால் சாட்சாத் ராமசந்திரன்

ஆம் 1979ல் விழுப்புரம் பக்கம் 12 பேர் கொல்லபட்டு பெரும் சர்ச்சை வெடித்தது, அகில இந்திய அளவில் அது எதிரொலித்து மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது

அலறி அடித்து எழும்பிய ராமசந்தினுக்கு தான் முதல்வர் அல்லவா? என நினைப்பு வந்து தானே விசாரிப்பதாக சொல்லி குழுவினை திருப்பி அனுப்பினார்

அதன் பின் எந்த சர்ச்சை என்றாலும் கொடூரமாக போலிசை ஏவி சுட்டுகொல்லும் முடிவிற்கு அவர் வந்தார். அதாவது ஆட்சியினை காக்க யாரையும் கொல்ல அவர் முடிவு செய்தார்

சென்னை மெரீனாவினை சுத்தம் செய்கின்றேன் (அவருக்கும் ஜெயாவிற்குமான கல்லறைக்காக இருக்கலாம்) என மீணவர்களை அவர் விரட்ட, கலவரம் வெடிக்க பல மீணவர்களை அவர் அரசு சுட்டு கொன்றது

மண்டைக்காட்டு கலவரத்திற்கும் சுடும் உத்தரவை அவர் வழங்கினார், அங்கும் பலிகள் உண்டு

மீனாட்சிபுரம் கலவரங்களிலும் இதே உத்தரவினை கொடுத்தார்

துப்பாக்கி சூடு என்பது அக்கட்சியின் ஆயுதமானது இப்படித்தான், ஜெயா இன்னும் மேலே சென்றார். அவர் ஆட்சியின் என்கவுண்டர்கள் உலகறிந்தது

இன்று அதே ராமசந்திரன் பாணியில் இந்த அரசும் வந்து சுடுகின்றது, ஆச்சரியமில்லை

கவனித்தால் புரியும் விஷயம் ஒன்றுதான்

தமிழரின் நியாயமான போராட்டங்களுக்கு திமுகவும் முண்ணணியில் இருந்து போராடியது, உயிரை கொடுத்தது. பின் ஆட்சிக்கு வந்தபின் பல விவகாரங்களில் அது தமிழர் உயிரை காத்தது

அதனால் ஆட்சியினை இழக்கவும் அது தயங்கவில்லை

ஆனால் பக்தவச்சலம் முதல் ராமசந்திரன், ஜெயா, பழனிச்சாமி வரை டெல்லி அடிமைகள். அது என்ன சொல்லுமோ அதனை செய்வார்கள். சுடுகின்றாயா ஆட்சியினை பறிக்கட்டுமா என்றால் அலறி அடித்து சுடுவார்கள்

சுட்டு கொன்றுவிட்டு சட்டம் ஒழுங்கை நிறுத்திவிட்டோம், ஆட்சி கலைக்க வேண்டாம் என சொல்வது அவர்கள் வாடிக்கை

அந்த தொடர்ச்சித்தான் தூத்துகுடி படுகொலைகள், இப்பொழுதும் கவனியுங்கள், ஏதோ எல்லாம் சொல்லி மழுப்பும் பழனிச்சாமி ஸ்டெர்லைட் பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல காணோம்

இம்மாதிரி சிக்கல்களுக்கு முடிவு ஒன்றே

ஒன்று தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்கட்டும், இல்லை மாநில மக்களின் நலம் காக்கும் நல்ல அரசு அமையட்டும்

இம்மாதிரி அடிமைகள் இருந்தால் இந்த அவலமே தொடரும்

ராமசந்திரன் தொடங்கி வைத்ததை அப்படியே நிறுத்தாமல் கொன்று குவித்து ஆட்சி நடத்துகின்றார்கள். அதை விட்டால் அவர்களுக்கு என்ன தெரியும்?

என்றெல்லாம் டெல்லி அடிமை அரசு அமைகின்றதோ அன்றெல்லாம் துப்பாக்கி சத்தம் இங்கு கேட்கும், என்றெல்லாம் மாநில நலன் ஓங்கி நிற்குமோ அப்பொழுது கேட்காது

தமிழக துப்பாக்கி சூடு வரலாறு இப்படித்தான்.

உண்மையில் இங்கு சுடதெரியாமல் சுட்டவன் எம்.ஆர் ராதா. அந்த துப்பாக்கி சூடு ஒழுங்காக நடந்திருந்தால் இவ்வளவு சீரழிவு வந்திருக்காது