தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வித்தியாசமாக இருக்கின்றது, அதாவது தனியார் நிலங்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம்

எனக்கு கொடநாட்டில் 10 சென்ட் வேண்டும் என மாபெரும் ஏழையாகிய நான் இப்ப்பொழுதே சொல்லி வைத்தாயிற்று

யார் யாருக்கு எங்கு வேண்டுமோ இப்பொழுதே சொல்லி வைத்துவிடுங்கள்.

சொந்த ஊரில் ஒரு கிணற்றை வைத்துகொண்டு ஆயிரம் பஞ்சாயத்து செய்து இறுதியில் பெரும் தொகை வாங்கிகொண்டு கொடுத்தவர் நிதியமைச்சர், அவர்தான் சிரிக்காமல் இதனை வாசித்தார்.

அவர் அறிவிக்கின்றார் தனியார் சொத்துக்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம்


இந்த பட்ஜெட்டின் சில வரிகள் மகா குழப்பமாகின்றன‌

அதாவது மத்திய அரசு நிதியினை குறைத்துவிட்டதாம், ஜிஎஸ்டியால் இன்னும் வரி குறைந்ததாம், உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் மின்சாரம் குறைந்ததாம்

500 மதுகடைகளை மூடியதில் பெரும் இழப்பாம்

போனமாதம்தான் மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை அல்ல, இணக்கமாக இருந்தால்தான் பல திட்டங்களை செயல்படுத்தமுடியும் என்றார்கள்

இப்பொழுது மத்திய அரசு தமிழக நிதியினை கொடுக்கவில்லை என்கின்றார்கள்

ஜிஎஸ்டி மசோதாவில் முழங்காலில் நின்று கையெழுத்து போட்டவர்கள் இவர்கள், உதய் மின் திட்டம் பெரும் மோசடி என தெரிந்தும் எதிர்ப்பை மீறி ஒப்புகொண்டவர்கள் இவர்கள்

ஆக ஆட்சி நீடிக்க எல்லா அநியாய திட்டத்திலும் மாநில நலனை காக்காமல் கைஎழுத்து இட்டுவிட்டு இன்று ஓஓஓ என அழுகின்றார்கள்

அம்மா, தமிழிசை அம்மா. மோடி மீது பழனிச்சாமி பட்ஜெட்டிலே குற்றம் சாட்டுகின்றார்? விடலாமா?

ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக்.