தமிழக பட்ஜெட் 2017-18 : தட்டுங்கள்.. அடிமைகளே மேஜையினை ஓங்கி தட்டுங்கள்…
ரூ.42 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம், தமிழக கடன் ஏற்கனவே தமிழகத்திற்கு ரூ.3.14 லட்சம் கோடி.
6 வருட அம்மா ஆட்சியின் சாதனையினை கண்டீர்களா?
இந்த கடனை வைத்துகொண்டுதான் விலையில்லா டவுடர் முதல் விலையில்லா ஹேர்பின் வரை கொடுத்தார்களா?
இவ்வளவு சிக்கலை வைத்துகொண்டுதான் ஸ்கூட்டி கொடுக்கவேண்டுமா?
ஆக கடன்வாங்கி மக்களுக்கு கொடுத்துவிட்டு , அம்மா கனவு, சின்னம்மா வழிகாட்டல் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
ஆனால் இவர்களை கண்டிக்கின்றோம், எப்படி சொல்லியிருக்க வேண்டும்?
அம்மாவின் தியாக வாழ்வின் பயனாக, இதய தெய்வம் அம்மாவின் சிறப்பான ஆட்சியில் தமிழக கடன் 3.14 லட்சம் கோடியாகிவிட்டது, சின்னம்மாவின் சிறப்பான வழிகாட்டலில் இன்னும் 42 ஆயிரம் கோடி கடன் வாங்க போகின்றோம்
(தட்டுங்கள், மேஜையினை ஓங்கி தட்டுங்கள் அடிமைகளே)
இந்த கடன் எங்கே வாங்கினார்கள்? யார் கடன் கொடுப்பார்கள்?
தாமிரபரணி ஏன் விலை போகாது?
ஆக அம்மா சமாதியில் வணங்கி சொல்லியிருப்பது என்னவென்றால், அம்மா , நீங்களே 3.14 லட்சம் கோடி கடனை விட்டு சென்றிருக்கும் பொழுது, பாவம் அடிமைகள் ஒரு 5 லட்சம் கோடி கடனாக உயர்த்தி உங்கள் பெயரை காப்பாற்றுவோம்
நாங்கள் கடனை உயர்த்தி வைக்க வைக்கத்தான் , உங்களுக்கு நல்ல பெயர் மிஞ்சும், நாங்கள் கடனை அடைத்துவிட்டால் உங்களைத்தான் தூற்றுவார்கள்
அதற்கு நாங்கள் வாய்பளிக்கவே மாட்டோம்..
இது சத்தியம், சத்தியம்,சத்தியம்
பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 20 முதல் 24 வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு
அதில் என்ன விவாதம்?
விவாதிக்க கூடிய அறிவாளி அந்த கட்சியில் யார் இருக்கின்றார்கள்?
யார் உருப்படியான கருத்துக்களை சொல்லபோகின்றார்கள்? சொல்ல கூடிய தகுதியில் யார் இருக்கின்றார்?
அப்படி ஒருவர் இருந்தால் அக்கட்சியில் அவர் இருக்கமுடியுமா? இருக்கத்தான் விடுவார்களா?
பின் என்ன நடக்கும்?
வழக்கம் போல மகா அமைதி, அதற்கு மேல் கேட்டால் சின்னம்மா வாழ்க, தினகரன் வெல்க என்பார்கள்
இதற்கு எதற்கு ஒரு விவாதம்???
துணுக்கு
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் : பகிரங்கமாக வெளியே வருவார்..! பழநெடுமாறன்
ஆம் இவர் வீட்டு அடுப்பாங்கரையில் பதுங்கி இருக்கின்றார், இனி வெளியே வருவார்
எல்லோரும் அவர் வீட்டு அடுப்படியினை பார்த்துகொண்டே இருங்கள்..
இன்னும் ஏமாற்றலாம் இனி இவர் சொல்லிகொண்டிருப்பதில் என்ன இருக்கின்றது??