தமிழக பல்கலை கழகங்களில் லஞ்சம் மட்டும் அல்ல அதுக்கும் மேல !!!

தமிழக பல்கலை கழகங்களில் லஞ்சம் மட்டும் கொடுத்து காரியங்கள் சாதிக்கபடுவதில்லை. சாம பேத தான தண்டம் உபயங்களை தாண்டி இளம்மாணவிகளை பேரமாக பேசியும் சில காரியம் நடத்தபடும் என்பது நெடுங்காலமாக இருக்கும் சர்ச்சை

மதுரை பேராசிரியை பேசியதாக வரும் ஆடியோ அதனைத்தான் சொல்கின்றது

அது போலி என சொல்லமுடியாதபடி ஆதாரங்களோடு அதிர்ச்சி இருக்கின்றது.

ஒரு பேராசிரியை புதிதாக கல்லூரியில் இணைந்த ஏழைபெண்களை மூளைச்சலவை செய்து தனக்கு மேலிடத்தில் இருக்கும் யாருக்கோ ஏற்பாடு செய்யபார்க்கின்றார்

அவர் பெரிய இடம் என்கின்றார், கவர்னர் லெவல் என்கின்றார் ஆறுதலாக அது கவர்னர் இல்லை எனவும் சொல்கின்றார். ஆக மிகபெரிய பதவியில் இருக்கும் யாருக்காகவோ இந்த புரோக்கர் வேலையில் பேராசிரியை கூட்டம் இறங்கி இருப்பது தெரிகின்றது

மார்க் தருவோம் , மேல்படிப்பு தருவோம் அரசு வேலைகளில் இடம் தருவோம் என்றெல்லாம் ஆசைகாட்டுகின்றார்

அம்மாணவிகள் தெளிவாக இருக்கின்றார்கள், ஆனால் ரியல் எஸ்டேட் புரோக்கர் அளவிற்கு அள்ளிவிட்டு அந்த மாணவிகளை குழப்ப பார்க்கின்றார் அவர்

அந்த பேச்சை கேட்டால் அவருக்கும் நிர்பந்தம் இருந்திருக்கின்றது, ஏதோ பெரும் மேலிடத்திலிருந்து வந்த நெருக்கடி

இந்த மாணவிகளை இப்படி வளைத்துகொடுத்தால் சில வெகுமதிகள் எல்லோருக்கும் கிடைக்கும் எனும் வியாபார ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதும் புரிகின்றது

பாடத்தை விளக்கவேண்டிய பேராசிரியர், தொழிலுக்கு பெண்களை தயார் செய்யும் புரோக்கர் போல பேசிகொண்டிருக்கின்றார், பெருங்கொடுமை

அந்த பேராசைரியர் இதனை புதிதாக செய்வதாக தெரியவில்லை, பதற்றமோ பயமோ கொஞ்சமுமில்லை. தொழில்முறை புரோக்கர் போல அட்டகாசமாக பேசுகின்றார்

பல மாணவிகளின் வாழ்க்கை நிச்சயம் தொலைக்கபட்டிருக்கலாம்

இந்நாள் வரை பணமில்லாதோர் படிக்க முடியாது என்றிருந்தது என்ற நிலை இருந்தது, பணம் செலவழித்தால் படிக்கலாம், லஞ்சம் கொடுத்தால் பல்கலைகழகத்தில் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது

இப்பொழுது பணம் இல்லாவிட்டால் என்ன பெண்ணாக இருந்தால் தடம்புரண்டால் போதும் படித்துவிடலாம் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதை இந்த ஆடியோ சொல்லிகொண்டிருக்கின்றது

ஏழை பெண்களின் பெற்றோரும் உடன்பிறந்தொரும் மகா கவனமாக இருப்பது நல்லது

ஒரு புரோக்கர் பேராசிரியை முகம் தெரியவந்திருக்கின்றது, இன்னும் ஏராளமான புரோக்கர்கள் தொழில் செய்பவர்கள் கூடுதலாக பேராசிரியர் பட்டம் சுமந்து பல்கலைகழகத்தில் கல்லூரிகளில் வலம் வரலாம்.

இந்நாட்டில் மான்களுக்கும் மாடுகளுக்கும் ஏதும் என்றால் சட்டம் போடுவார்கள்

பெண்ணாக பிறந்துவிட்டால் குழந்தை என்றாலும், கல்லூரி மாணவி என்றாலும் ஒரு பாதுகாப்புமில்லை.

மேய்பர்களே மந்தைகளை பலிகொடுக்கும் காலமிது, மாணவிகளும் அவர்களை பெற்றவர்களுமே மகா கவனமாக இருக்க வேண்டும்

(முன்பெல்லாம் இம்மாதிரி ஆடியோ, வீடியோ எல்லாம் வராது. காசு கொடுத்தாலும் நீ சின்னபையன் தரமாட்டோம் போ என்பார்கள்

இப்பொழுதெல்லாம் கேட்காமலே அனுப்பி வைக்கின்றார்கள், என்ன ஒரு வளர்ச்சி 🙂 )