தமிழக பாஜக ரொம்ப சோம்பேறி….

சிங்கள உச்ச புத்த பிக்குவிற்கு இந்தியா விசா மறுப்பு : கொழும்பில் சர்ச்சை

அதாகபட்டது ஈழதமிழர் பிரச்சினைக்கு மூல காரணமே இந்த சிங்கள புத்த மத குருக்கள்தான். அவரில் ஒரு சுப்ரீம் லீடர் இந்தியாவிற்கு வந்திருக்கின்றார், ஏதோ விசா சர்ச்சையில் விரட்டியிருக்கின்றார்கள்

அரசின் கொள்கை அல்ல, மாறாக விசா குழப்பம் மட்டுமே

இதனை வைத்து இந்த தமிழக பாஜக எப்படி எல்லாம் அரசியல் செய்திருக்கலாம், மீணவர் பிரச்சினைக்காக மோடி புத்த குருக்களையே விரட்டினார். தமிழர்களின் காவலர் எங்கள் மோடி என கிளம்பவேண்டாமா?

செய்ய மாட்டார்கள், நாளை ஈழதமிழருக்கு ஏதும் மோடி செய்தால் கூட இந்த தமிழக பாஜக தூங்கிகொண்டுதான் இருக்கும்

இவர்களை வைத்து எப்படி தமிழகத்தில் உருப்படுவது??

இதே நிலையில் வைகோவோ, திருமாவோ, சீமானோ பாஜ கூட்டணியில் இருந்தால் எப்படி ஆர்ப்பரிப்பார்கள்??

“எங்கள் கோரிக்கையினை ஏற்று கொலைகார சிங்களை விரட்டிய மோடி வாழ்க, சிங்களனை விரட்ட குரல் கொடுத்து வெற்றி கண்டவன் நான்…” என கிளம்பிவிடுவார்கள்

தமிழக பாஜக ரொம்ப சோம்பேறி….


மத்திய அரசின் திட்டம் வரவேற்கதக்கது, நான் மோடியினை ஆதரிக்கின்றேன் : வைகோ

இதனை ஏதும் வங்கி வரிசை பக்கமோ, தெருவில் வியாபாரம் பார்ப்பவர்களிடம் சென்று சொல்லட்டும் பார்க்கலாம், கருப்புதுண்டிலே தொங்க விட்டுவிடுவார்கள்.

என்னவோ, சேர்ந்தாரை கொல்லி எனும் ராசிக்கு மகா பொருத்தமானவர் வைகோ, அவரின் வாழ்நாள் சாதனை அதனைத்தான் சொல்கின்றது

இவர்தான் ராஞ்சிக்கு ராஜபக்சே வரும்பொழுது மோடி ஒழிக என ஒப்பாரி வைத்தவர்.

பாஜகவினர் உஷாராகவேண்டிய நேரமிது.


.