தமிழக போராட்டங்களில் வழக்கறிஞர்கள் பங்கு மறக்கமுடியாதது
பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தியது வழக்கறிஞர்கள்.
காந்தி, வ.உ.சி முதல் வெள்ளையனை சட்டபூர்வமாக எதிர்த்த எல்லோரும் வழக்கறிஞர்களே.
சமூக உரிமைக்காக போராடிய நீதிகட்சி பன்னீசெல்வமும் வழக்கறிஞரே.
ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக சட்டம் ஆளும் நாட்டில் வழக்கறிஞர்களின் குரல் இன்றியமையாதது.
முன்பெல்லாம் தமிழக போராட்டங்களில் வழக்கறிஞர்கள் பங்கு மறக்கமுடியாதது, பல போராட்ட வெற்றிகளின் காரணகர்த்தாக்கள் அவர்கள்தான்.
இன்று அவர்கள் அமைதியாகிவிட்டார்கள், அநியாய சாவுகள் அதிகரிக்கின்றன.
வழக்கறிஞர்கள் உரிமைகுரல் எழுப்பாத எந்த ஜனநாயக நாடு எதுவும் உருப்படாது.