தமிழக மணல் மாபியா பற்றி இன்னும் தலக்காட்டு மக்களுக்கு தெரியாது போல
கன்னடத்தில் தலக்காடு என்றொரு இடம் உண்டு, சிறிய ஊர். ஆனால் அது சில விஷயங்களுக்காக பரபரப்பாக பேசபடுகின்றது
அதாவது அந்த ஊர் காவேரி கரையில் உள்ளது, காவேரி சிக்கல் அல்ல மாறாக சிக்கல் மணலால் வந்தது
முன்பொருகாலத்தில் அலமேலு எனும் ராணி இந்த ஊர் மண்ணாய் போகட்டும் என சாபமிட்டாராம், அதிலிருந்து அந்த ஊர் மண்ணாகிவிட்டதாம் இவர்கள் அதனால் அருகில் குடியேறினார்களாம்
இன்றும் எடுக்க எடுக்க மண்ணாய் வருகின்றதாம், என்ன செய்தாலும் மணல் கூடுமே தவிர குறையாதாம், தலக்காடு மண் பிரச்சினையினை சரி செய்ய இவர்களால் முடியவே இல்லையாம்
இது மைசூர் சமஸ்தானத்திற்கு 400 ஆண்டுகாலம் வாரிசு இல்லாத சாபம் போல, மண் சாபம் என சொல்லிவிட்டு அந்த மண்ணை தொடாமால் வாழ்கின்றனர் தலக்காட்டு மக்கள்
இது சாபமா? இல்லை அள்ள அள்ள வருமா? வந்து மறுபடியும் மூடுமா? என பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன
என்ன பெரிய சாபம்?
தமிழக பன்னீர் செல்வம், மணல் மாபியா ஆறுமுக சாமி வசம் ஒரு மாதம் தலக்காடு கிடைக்கட்டும், ஒரு சொட்டு மணல் அங்கு இருக்கும்?
ஒரு ஸ்பூன் விடாமல் அள்ளி ஏற்றுமதி செய்யமாட்டார்களா?
தமிழக மணல் மாபியா பற்றி இன்னும் தலக்காட்டு மக்களுக்கு தெரியாது போல, முடிந்தால் இவர்களை உள்ளே விட்டு பார்க்கட்டும்
மணலோடு ராணி அலமேலு அவர் சாபம் எல்லாம் அள்ளிகொண்டு வந்துவிடுவார்கள்.